செய்திகள் :

போபாலில் யாசகம் பெறவும் தானம் வழங்கவும் தடை!

post image

போபால் : மத்திய பிரதேச தலைநகர் போபால் அமைந்துள்ள போபால் மாவட்டத்தில் பிச்சையெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, யாரேனும் யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு தானம் வழங்குதலும் தடை செய்யப்பட்டுள்ளது.

போபாலில் சாலைகள், போக்குவரத்து சிக்னல்கள் உள்பட பொது இடங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்துவோர் பலர், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் போதைப்பொருள் புழக்கத்துக்கு காரணமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பாரதீய நாகரிக் சுரக்‌ஷா சங்ஹிதா சட்டத்தின் 163(2)-ஆவது பிரிவின்கீழ் போபால் மாவட்ட ஆட்சியர் கௌஷ்லேந்திர விக்ரம் சிங் திங்கள்கிழமை(பிப். 3) பிறப்பித்துள்ள உத்தரவை மீறி, மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போபாலின் கோலார் பகுதியில் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்துவோர் தங்கியிருப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள சமூக நலக்கூடத்தை அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் இந்தூர் மாவட்டத்தில் யாசகம் கேட்பதற்கு மாவட நிர்வாகத்தால் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செல்போன் உற்பத்தியில் இந்தியாவுக்கு 2வது இடம்!

உலக அளவிலான செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு நாட்டில் 2 மையங்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் தற்போது 300 உற்பத்தி மையங்கள் இருப்பதாகவும... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து 1.55 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. தகுதி அற்றவர்களாக கருதப்பட்டவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி முறைகேடுகளை கண்டறிய ஆம் ஆத்மியின் தன்னார்வலர் குழு!

தில்லி பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடி முறைகேடுகள் நடைபெறுவதைக் கண்டறிய ஆம் ஆத்மி கட்சி தன்னார்வலர் குழுக்களை அமைத்துள்ளது.தில்லி பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் மிகைப்படுத்தப்பட்ட விபத்து: ஹேம மாலினி

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் நேரிட்ட கூட்ட நெரிசல் மிகப்பெரிய நிகழ்வு அல்ல என்றும், மிகைப்படுத்தப்பட்டது எனவும் பாஜக எம்.பி., ஹேம மாலினி தெரிவித்துள்ளார். கும்பமேளா கூட்ட நெரி... மேலும் பார்க்க

தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.2300 கோடி வருவாய்: மோடி பதிலுரை

மக்கள் பிரச்னைகள் சிலருக்குப் புரியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சியினரை மறைமுகமாக சாடியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி நன்றி... மேலும் பார்க்க

எல்லை விவகாரங்களில் ராகுல் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு: ராஜ்நாத் சிங்

எல்லை சார்ந்த விஷயங்களில் ராணுவ தலைமைத் தளபதியின் அறிக்கையை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்திக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் ... மேலும் பார்க்க