செய்திகள் :

மகாராஷ்டிரா: ஆண் குழந்தை இல்லாததால் மனைவி மீது சந்தேகம்; பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கணவர்

post image

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள உருளி கஞ்சன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இடத்தில் வசிப்பவர் சுக்காராம். வெல்டராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி திருமணம் மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்தார்.

கடந்த மாதம் 20ம் தேதி சுக்காராம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். வீட்டில் ஏற்கனவே இருந்த பிரச்னையில் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. இதில் வீட்டைச் சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை எடுத்து தனது மனைவியின் பிறப்புறுப்பில் சுக்காராம் ஊற்றினார். அதோடு இது குறித்து வெளியில் சொன்னால் கடும் விளைவு ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

தன்னை மருத்துவனைக்கு அழைத்து செல்லும்படி சுக்காராமிடம் அவரது மனைவி கேட்டுக்கொண்டார். ஆனால் சுக்காராம் தனது மனைவியைச் சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை. அதோடு தனது மனைவியும் தனியாகச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கவில்லை. 

இது குறித்து போலீஸில் அல்லது வேறு யாரிடமும் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டி இருந்தார். சமீபத்தில் அப்பெண் சோலாப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார்.

அப்போது தனது கணவன் செய்த கொடுமைகள் குறித்து சொல்லி அழுதுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த தைரியத்தில் மீண்டும் உருளிக்கு வந்து தனது கனவருக்கு எதிராக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸாரின் விசாரணையில், ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்கவில்லை என்ற கோபத்திலும், வீட்டிற்கு வெளியில் செல்லும் போது வேறு ஒருவருடன் தொடர்பு வைத்து இருக்கிறாய் என்று கேட்டு அடிக்கடி அடித்து உதைத்துள்ளார்.

சம்பவத்தன்று சுக்காராம் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் தனது மனைவியை அடித்து உதைத்து ஆசிட்டை மனைவியிம் பிறப்புறுப்பில் ஊற்றினார். இதனால் சுக்காராம் மனைவி வலி தாங்க முடியாமல் கத்தி இருக்கிறார். அதோடு வீட்டை விட்டு வெளியில் ஓடி தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும் முயன்றார். ஆனால் சுக்காராம் தனது மனைவியை தனி அறையில் அடைத்து கதவைப் பூட்டிவிட்டார் என்று தெரிய வந்துள்ளது.

கெளதம் அதானி மீதான குற்ற வழக்குகள்; கைவிட்ட அமெரிக்க அரசு; தள்ளுபடி செய்த நீதிமன்றம்; காரணம் என்ன?

தொழிலதிபர் கெளதம் அதானி இந்தியாவில் சோலார் மின் திட்டங்களைப் பெற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாக அ... மேலும் பார்க்க

`அந்த வலையில் மாட்டிக்கொண்டேன்...'- நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் துவிஷா சர்மா. எம்.பி.ஏ பட்டதாரியான இவர், டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 2024-ல் ஒரு டேட்டிங் செயலி மூலம் போபாலைச் சேர... மேலும் பார்க்க

டிரைவருடனான பழக்கத்தை கைவிட மறுத்த அக்கா; வீட்டின் முன் கொடூரக் கொலை செய்த தம்பி - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள சென்னல்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் முத்துமாலை. இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசுடைமை வங்கியில் மேலாளராகப் பணிபுருந்து வந்தார். இவரும் இவரது... மேலும் பார்க்க

திருச்சி: திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவி; தலையில் கல்லால் கொடூரத் தாக்குதல் நடத்திய இளைஞர்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், திருச்சியில் தங்கி அங்குள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ படித்துக் கொண்டே, பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், சிவகங்கை மாவட்டம், ... மேலும் பார்க்க

சனி பூஜைக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - மறுத்த பெண், உறவினரை கொன்ற மந்திரவாதி

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள நிஜாம்பூர் ஜெய்தானே என்ற பகுதியில் வசிப்பவர் யோகேஷ் கெய்ர்னார். இவர் பில்லி சூனியம் வைக்கக்கூடிவராக அறியப்படும் ஒரு மந்திரவாதி. இவர் சொந்தமாக ஒரு கோயில் நடத்தி வர... மேலும் பார்க்க

மும்பை: கணவன் துணையோடு காதலன் கொலை; டிரம்மில் அடைத்து சாக்கடையில் வீசிய பெண் சிக்கியது எப்படி?

டிரம் கொலைகள் பற்றி உத்தரப் பிரதேசத்தில் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மும்பையில் தற்போது அது போன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள மும்ப்ரா என்ற இடத்தில் வசித்தவர் அர்பாஸ் அலிகா... மேலும் பார்க்க