செய்திகள் :

மகாராஷ்டிரா: சாலையோரக் கிணற்றில் விழுந்த வேன்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி; பிரதமர் இரங்கல்

post image

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டர்பூரைச் சேர்ந்த 15 பேர் கோயில் ஒன்றுக்குச் சென்றுவிட்டு வேன் ஒன்றில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.

வேன் தந்துல்வாடி என்ற கிராமத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது. சாலையோரம் விவசாயக் கிணறு ஒன்று இருந்தது. அந்தக் கிணற்றுக்குள் வேன் விழுந்தது.

இதனை பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பார்த்து ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினர் உடனே வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் வந்து தண்ணீருக்குள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் தண்ணீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 4 பெண்கள் மற்றும் 6 மாத குழந்தையும் அடங்கும்.

இறந்து போன அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தவிர 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் சுனேத்ரா பவார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதோடு இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்து இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியும் இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அதோடு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதமும் இதே போன்று கார் ஒன்று நாசிக் மாவட்டத்தில் சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். உடனே அந்தக் கிணற்றை அதிகாரிகள் மூடிவிட்டனர்.

அஸ்ஸாம்: விமானப்படை விமானம் விழுந்து 5 வீரர்கள் பலி; முதல்வர் ஹிமந்தா சொல்வது என்ன?

அஸ்ஸாமில் மாநிலம் ஜோர்ஹட் விமானப்படைத்தளத்தில் இன்று விமானப்படை விமானம் AN-32தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் விமானத்தில் இருந்த விமானப்படை வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த... மேலும் பார்க்க

மன்னார்குடி: `அப்பா வந்திருக்கேன் எழுந்திரி ராசா'- கார் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி; கதறும் பெற்றோர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை அரசுப் பள்ளியில் லோகேஷ், ரச்சித் ஆகிய இருவர் சிறுவர்கள் ஆறாம் வகுப்பும், ராஜமுரளி என்ற சிறுவன் ஏழாம் வகுப்பும் படித்து வந்தனர். இன்று மாலை வழக்க... மேலும் பார்க்க

குன்னூர்: மலைப்பாதையில் கவிழ்ந்த ஆந்திர சுற்றுலா வாகனம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குடும்ப உறவினர்கள் 22 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வேன் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர். குடும்பமாக ஊட்டி, குன்னூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு நேற்றிரவு குன்னூ... மேலும் பார்க்க

கரூர்: லாரி மீது கார் மோதி விபத்து; 8 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்

உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த், பெங்களூரில் முறுக்கு தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான உசிலம்பட்டி நோக்கி காரில் குடும்பத்துடன் திரும்பி... மேலும் பார்க்க

டூவீலரில் பயணித்தவர்கள் மீது மோதிய கார்; மூவர் உயிரைப் பறித்த கோர விபத்து - ஏர்வாடி அருகே சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பகுதியைச் சேர்ந்தவர் லாடசாமி. இவருடைய மகள் பஞ்சவர்ணம் மற்றும் மருமகன் புல்லாணி. இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக நேற்றைய தினம் ஏர்... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில்... தீர்ந்த குடிநீர்: சஹாரா பாலைவனத்தில் 49 உயிர்களைக் குடித்த லாரி ரிப்பேர்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சஹாரா பாலைவனப் பகுதியில், பயணம் செய்த லாரி பழுதடைந்ததால் குடிக்கத் தண்ணீரின்றி தாகத்தால் தவித்து 49 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.மாலி ... மேலும் பார்க்க