செய்திகள் :

மகாராஷ்டிரா மாநகராட்சித் தேர்தல்: "MP, MLAக்களின் உறவினர்கள் வென்றால் பதவி கிடைக்காது" - பாஜக உறுதி

post image

மகாராஷ்டிராவில் வரும் 15ம் தேதி நடைபெறும் மாநகராட்சித் தேர்தலில் பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் வாரிசுகள், உறவினர்கள் போட்டியிடுகின்றனர்.

அது போன்ற வாரிசுகளுக்கு மாநகராட்சியில் எந்தப் பதவியும் கொடுக்க மாட்டோம் என்று மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ''தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்களின் உறவினர்களுக்கு சீட் வழங்கக்கூடாது என்று கட்சி சமீபத்தில் தீர்மானித்தது.

உள்ளாட்சித் தேர்தல் செயல்முறை தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த முடிவு எடுக்கப்பட்டது. முடிந்தவரை இதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்'' என்றார்.

ஆனால் ஜல்காவ் மாநகராட்சி வார்டு 7ல் ஜல்காவ் எம்.எல்.ஏ. சுரேஷ் போலேயின் மகன் விஷால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதோடு மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அல்லது எம்.பி.க்களின் உறவினர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரவீந்திர சவானிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதிகள் பயன்படுத்தப்பட்டன. எம்.எல்.ஏ தேவயானி பாரண்டேவின் மகன் அஜிங்க்யா பாரண்டே மற்றும் எம்.எல்.ஏ சீமா ஹிரேயின் மகள் ராஷ்மி ஹிரே ஆகியோர் கட்சியின் உத்தரவுக்குப் பிறகு தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

மகாராஷ்டிரா தேர்தல்
மகாராஷ்டிரா தேர்தல்

இருப்பினும், இந்த உத்தரவு சில மாநகராட்சி அமைப்புகளில் சரியான நேரத்தில் சென்றடையவில்லை. இதன் விளைவாக சட்டமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் சிலர் போட்டியில் இருக்கின்றனர். இதுபோன்ற சமயங்களில் கூட, அந்தந்த மாநகராட்சிகளில் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்சி அவர்களுக்கு எந்தப் பதவியையும் வழங்காது" என்று அவர் கூறினார்.

ரவீந்திர சவானின் இக்கருத்து பா.ஜ.க தலைவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

புனேயில் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 21 கவுன்சிலர்கள் இந்தத் தேர்தலில் கட்சி மாறி அதே வார்டில் வேறு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இதேபோன்று புனே மற்றும் சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் சரத்பவார் மற்றும் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து வெவ்வேறு சின்னத்தில் போட்டியிடுகின்றன.

49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (08-01-2026) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``அறிவு சங்கமத்தை, அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகு... மேலும் பார்க்க

'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வ... மேலும் பார்க்க

`நாளை எடப்பாடியை சந்திக்கிறேன்; எங்கள் கூட்டணியில் எந்த நெருக்கடியும் கிடையாது'- நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாலங்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,"நாளை எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கப் போகிறேன். ஏற்கெனவே, பா.ம.க கூட்டணியில் வந்துள்ள... மேலும் பார்க்க

`வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' - வேதாந்தா குழும தலைவரின் மகன் மரணம் - யார் இந்த அக்னிவேஷ்?

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால் காலமாகியிருக்கிறார். வேதாந்தா குழுமம் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில... மேலும் பார்க்க

சோதனையின்போது உள்ளே நுழைந்த மம்தா; ஆவணங்களைக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டும் ED - நடந்தது என்ன?

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை இன்று (ஜன. 8) சோதனை நடத்தியிர... மேலும் பார்க்க

பாமக : `நான்முனையிலும் முட்டுக்கட்டை' - ராமதாஸ் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக திட்டமிட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு அடைக்கல இடம் கிடைக்கும் என்றச் சூழலில் தனித்து விடப்பட்ட... மேலும் பார்க்க