India - US Trade Deal: `இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மட்டுமே!' - க....
மணமான பெண்ணுக்குத் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை; 'செல்லாது' - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
திருமணமான பெண் வழக்கறிஞர் ஒருவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த ஒரு வழக்கில் தனது காதலன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
இம்மனு நீதிபதி நாகரத்தா, உஜ்ஜால் புவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பெண் வழக்கறிஞரை ஆண் வழக்கறிஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி இருந்தார்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சம்மதத்துடன் நடக்கும் உறவில் விரிசல் ஏற்படும்போது, குற்றவியல் நீதித்துறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கவலை தெரிவித்தனர், திருமண வாக்குறுதியின் பேரில் மற்றொரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடும் திருமணமான பெண், தான் உறவு வைத்துக்கொள்ளும் ஆண் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒரு பெண் ஏற்கனவே திருமண வாழ்வில் இருப்பதால் அவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ள தகுதியற்றவர் என்று கூறி திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் வழக்கறிஞர் கொடுத்திருந்த புகாரை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவ்வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், இவ்வழக்கில் மனுதாரர் மற்றொருவருடன் உறவில் இருந்தபோது ஏற்கனவே திருமணம் செய்து கொண்டிருந்தார். மேலும் அவர்களிடையே இருந்த ஒருமித்த உறவில் விரிசல் ஏற்பட்டதால் உருவான வழக்கு இது.
எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் செயல்களில் ஈடுபடும் போது திருமணம் செய்வதாகக் கூறியது உண்மையாகவே இருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அத்தகைய வாக்குறுதியைச் சட்டப்பூர்வமாகச் செயல்படுத்த முடியாது.
ஏனெனில் பாதிக்கப்பட்ட பெண் திருமணத்திற்குத் தகுதியற்றவர். சட்டம் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தைத் தடைசெய்கிறது. முதல் திருமணம் செயல்பாட்டில் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை சட்டம் தடுக்கிறது'' என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

















