செய்திகள் :

மதிமுக: "தனிச்சின்னம், ராஜ்ய சபா சீட்...” - திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் அர்ஜுனராஜ்

post image

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி எனக் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திமுக தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை கூட்டணிக் கட்சிகளுடன் தொடங்கி இருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இன்று (பிப்.23) தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழு மதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது.

முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது, "இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எங்களுடைய வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் திமுக குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறோம்.

இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தையின் முடிவுகளை அறிவிப்போம்.

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். அது முடிவில்லாதது. அதனால் இந்தக் கூட்டணி தொடரும்.

மதிமுக அர்ஜுனராஜ்
மதிமுக அர்ஜுனராஜ்

ராஜ்ய சபை சீட் தொடர்பாக கோரிக்கை வைத்திருக்கிறோம். மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

`கேட்ட மூன்றில் இரண்டு அவுட்; அந்த ஒன்று?' - ஶ்ரீதர் வாண்டையார் போடும் கணக்கு திமுக-விடம் பலிக்குமா?

திமுக கூட்டணியில் சமீபத்தில் தேமுதிக இணைந்தது தமிழக அரசியல் வட்டத்தில் பேசு பொருளாக அமைந்தது. கூட்டணி கட்சிகளிடம் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து தொகுதி பங்கீடு பேச்சு ... மேலும் பார்க்க

விழுப்புரம் கோட்டையில் சரிந்த செல்வாக்கு! - மகனுக்காக பாசப்போராட்டம் நடத்தும் பொன்முடி

காய் நகர்த்திய பொன்முடி... கைவிரித்த அறிவாலயம்!விழுப்புரம் மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக மாவட்டச் செயலாளராகவும், தி.மு.க ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் பொன்ம... மேலும் பார்க்க

TVK Vijay: ஜல்லிக்கட்டு காளை குட்டிகதை முதல் கரூர் சம்பவம் வரை! - வேலூரில் விஜய் பேசியது என்ன?

வேலூரில் தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், " எங்க ஓட்டு எங்க உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்க ஓட்டு விசில் சின்னத்துக்கு தான். யா... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்ற உத்தரவு: இதுவரை வசூலித்த 133 பில்லியன் டாலர் வரி... ரீஃபண்ட் செய்யுமா அமெரிக்கா?

சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்த 'வரி சட்டத்திற்கு புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இதனா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே வெடித்த மோதல் - வான்வழித் தாக்குதலால் எல்லையில் உச்சகட்ட பதற்றம்!

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாவட்டமான பன்னுவில், தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். இதற்கு முன்... மேலும் பார்க்க