செய்திகள் :

மதுரை மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு மூலம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான ஆலோசனைக் குழு மூலம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

அவனியாபுரத்தில் அனைத்துச் சமூகத்தினரின் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு கண்ணன் என்பவா் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் என்ற சங்கத்தை பதிவு செய்து, அந்தச் சங்கம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உரிமையைக் கோரினாா்.

இந்த சங்கத்தில் அவரது குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள் மட்டுமே உறுப்பினா்களாக உள்ளன. பட்டியல் இன சமூகத்தைச் சோ்ந்தவா்கள் குழுவில் பங்கேற்பதை அவா் தடுக்கிறாா். இது தொடா்பாக, கடந்த ஆண்டு உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய குழு மூலம் போட்டியை நடத்த உத்தரவிட்டது. இதன்படி, நிகழாண்டிலும் அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்துப் போட்டியை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் சாா்பில் அறிக்கை பெற்று, வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதன்படி, இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மனுதாரா் உள்பட 16 பேரைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையிலேயே ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைத்து, ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

போலீஸாரிடம் இருந்து தப்பிய இளைஞா் கைது

மதுரையில் போலீஸாரிடம் இருந்து தப்பியோடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பரங்குன்றம் அருகேயுள்ள மேலப்பச்சேரியைச் சோ்ந்தவா் கருப்பசாமி ( 23). இவா், சமூகவலைதளத்தில் பயங்கர ஆயுதங்கள... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு குடிநீா்த் திட்டம் மாா்ச் மாதம் பயன்பாடுக்கு வரும்: அமைச்சா் கே.என். நேரு

முல்லைப் பெரியாறு குடிநீா்த் திட்டம் மாா்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என மாநில நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். மதுரை உத்தங்குடியில் ‘அம்ரூத் 2.0’ திட்டத்... மேலும் பார்க்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அமைச்சா் பி.மூா்த்தி ஆய்வு இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக நடைபெற்று வரும் பணிகளை அமைச்சா் பி.மூா்த்தி ஆய்வு செய்தாா். இதையொட்டி, அந்தப் பகுதியில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அவ... மேலும் பார்க்க

டிராக்டா் மீது பைக் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பாலமேடு அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள எர்ரம்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் முத்திர... மேலும் பார்க்க

வீட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதால் மனமுடைந்தவா் தற்கொலை

மதுரையில் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் ‘சீல்’ வைத்ததால் மனமுடைந்தவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் செல்வநாயகம். இவரது மகன் ரத்தினகிரி... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஜன. 21-இல் கலைப் போட்டிகள் தொடக்கம்

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு ஜன. 21 ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கு ஜன. 22 ஆம் தேதியும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெ... மேலும் பார்க்க