செய்திகள் :

`மாப்பிளைக்கு சுகர் இருக்கு'- தரகு பணம் தராத ஆத்திரம்; மண்டபத்தில் திருமணத்தை நிறுத்திய நபர்!

post image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், நெல்லை மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் பெரியவர்கள் முன்னிலையில் பேசி சாத்தான்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த திருமணத்தை திருமண ஏற்பாட்டாளர் ஒருவர் பேசி முடித்துள்ளாராம். இந்த நிலையில், பெண் வீட்டில் அந்த நபருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை பேசியபடிக் கொடுத்துள்ளனர். ஆனால், மணமகன் வீட்டில் பேசிய பணத்தை தராமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த திருமண ஏற்பாட்டாளரான நபர், தரகுப் பணத்தை மணமகன் வீட்டில் கேட்டுள்ளார்.

திருமண மண்டபம்

அவர்கள் தர முடியாது என்று கூறியுள்ளனராம்.  இதனால் ஆத்திரமடைந்தவர், நேராக திருமணம் நடக்கும் சாத்தான்குளத்தில் உள்ள மண்டபத்திற்குச் சென்று, மணமகனுக்கு காலில் ஏற்கெனவே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயத்தை போட்டோவில் காண்பித்து, ``மணமகனுக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதனால்தான் காலில் காயம் ஆறாமல் உள்ளது. தெரியாமல் நான் உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வைத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார், உடனடியாக மணமகன் வீட்டிற்கு போன் செய்துள்ளனர். அவர்களிடம் இது குறித்து கேட்டுள்ளனர். அவர்கள், ``இது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம்தான்" என்று கூறியுள்ளனர். ஆனால், அதைக் கேட்காத மணமகள் வீட்டார் உடனடியாக திருமணத்தை நிறுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகனும் மணமகன் வீட்டாரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

சாத்தான்குளம் பஜார்

இந்தச் சம்பவம் அறிந்து அங்கு வந்த சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இரு வீட்டாரும் பேசி இந்த திருமணத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், மணமகன் வீட்டார், உறவினர்களிடம் விசாரித்து பார்த்தபோது திருமண ஏற்பாட்டாளர், தனக்கு வர வேண்டிய தரகுப் பணத்தைத் தராத ஆத்திரத்தில் இப்படிச் செய்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

பக்ரீத் ஆட்டு விற்பனை அமோகம்; குவிந்த ஆடுகள்; விலை பேசி தூக்கி சென்ற மக்கள்: வாடிப்பட்டி சந்தை Album

பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக... மேலும் பார்க்க

காத்திருந்த 42 மணமகன்கள்: திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட 'திருமண மோசடி' - ஊரையே அதிரவைத்த சம்பவம்!

மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 24) ஒரே மேடையில் 42 பேருக்கு திருமணம் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த திருமண விழாவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் மணமகன்... மேலும் பார்க்க

'ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் விபத்து காப்பீடு' - மணமகன் குடும்பத்தின் திருமணப் பரிசு வைரல்!

திருமணத்தை சிலர் மிகவும் ஆடம்பரமாக நடத்துவதுண்டு. திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் மணமக்களுக்கு பரிசு வழங்குவது வழக்கமான ஒன்று. அதேசமயம் மணமக்கள் வீட்டார் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு ரி... மேலும் பார்க்க

மணலி: எண்ணெய் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; வெடித்துச் சிதறிய பேரல்கள்.. பதறவைக்கும் காட்சிகள்!

சென்னை அடுத்த மணலி, தாண்டாம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆயில் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பழைய ஆயில் பேரல்கள் அடுத்தடுத... மேலும் பார்க்க

உபி: 15 வயதில் திருமணம்; 22 வயதில் 5 குழந்தைகள்: ஆண் குழந்தைக்காக 6-வது முறையாக கர்ப்பம் தரித்த பெண்

வட மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆனால் தென்னிந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் ஆந்திரா அரசு அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிக்க... மேலும் பார்க்க

மகளின் அறிமுக படத்தை ஹிட்டாக்க ஷாருக் கான் திட்டம்; கிங் படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்கும் ரன்வீர்

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது மகள் சுஹானா கானை `கிங்' என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார். ஆரம்பத்தில் இப்படத்தில் ஷாருக் கான் கெளரவ வேடத்தில் மட்டும் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது படத்தி... மேலும் பார்க்க