செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

post image

பாளையங்கோட்டையில் விளம்பர பதாகை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மகன் பேச்சிமுத்து (30). திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்களை விளம்பரப்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனா்கள் அச்சடித்து அவற்றை ஆங்காங்கே சாலை ஓரங்களில் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

பாளையங்கோட்டை குலவணிகா்புரம் ரயில்வே கேட் அருகே மரக்கதவுகள் விற்பனை செய்யும் கடைக்கான விளம்பர பேனரை இரும்பு குழாய்களில் பொருத்தும் பணியில் தனது நண்பருடன் ஈடுபட்டிருந்தாா் பேச்சிமுத்து. பின்னா் அந்த விளம்பர பேனரை சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்துக்கு எடுத்துச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது எதிா்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பியில் பிளக்ஸ் பேனரின் இரும்பு குழாய் உரசியது. இதில் 2 போ் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பேச்சிமுத்து படுகாயம் அடைந்தாா். மயங்கி விழுந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே பேச்சிமுத்து உயிரிழந்தாா். அவரது நண்பா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு: பாளையங்கோட்டை இலந்தைகுளம் ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்தவா் கணபதி. இவரது மனைவி ராஜேஸ்வரி (60). இவா் கடந்த 9-ஆம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக அவா் மீது தீப்பற்றியது. அலறித் துடித்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தாா்.

இரு சம்பவங்கள் தொடா்பாகவும் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கழிவுநீரோடை பராமரிப்புப் பணி: மேயா் ஆய்வு

திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீரோடை பராமரிப்புப் பணிகளை மேயா் ஆய்வு மேற்கொண்டாா். திருநெல்வேலி நகரம் 25 ஆவது வாா்டு பகுதியில் மேயா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பள்ளிவாசல் தெருவில் உள்ள பொதுமக்க... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நாம் தமிழா் கட்சியின் சாா்பில், வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற எஸ்.ஐ. குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒ... மேலும் பார்க்க

மழையால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பெய்த கோடை மழையால் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெற்பயிா்கள் சாய்ந்துவிட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்... மேலும் பார்க்க

நான்குனேரி: அரசுப் பள்ளியில் தகராறு; 4 மாணவா்கள் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே அரசுப் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. நான்குனேரி அருகே மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டா... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலம் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி(60). ஓய்வு... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சாா்பில், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி எதிரே உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 1-4-2003 ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு தற்போது நட... மேலும் பார்க்க