செய்திகள் :

முதலிரவில் முகத்திரையை எடுக்க ரூ.90 லட்சம்: பெண் வீட்டார் மீது `கொலை முயற்சி' வழக்கு - என்ன நடந்தது?

post image

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் முஸ்கான் சிங். இவருக்கும் கல்பனா என்றப் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. முதலிரவு அன்று கல்பனா தன் முகத் திரையை அகற்ற ரூ.90 லட்சம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த முஸ்கான் சிங் அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கவே, அன்று இரவே, கல்பனா தன் நகைகளை எடுத்துக்கொண்டு தன் பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

காவல்துறை
காவல்துறை

அதைத் தொடர்ந்து, கல்பனாவின் குடும்பத்தினர் அடிக்கடி வந்து முஸ்கான் சிங் குடும்பத்தாரிடம் பணம் கேட்டு சண்டையிட்டிருக்கின்றனர். சிலமுறை, வரதட்சணைக் கொடுமை வழக்குப் பதிவு செய்யப்போவதாகவும் மிரட்டியிருக்கின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம், கேட்கப்பட்ட பணத்தைத் தராவிட்டால் மணமகன் குடும்பத்தினரை உயிரோடு எரித்துவிடுவோம் என்று மணப்பெண் வீட்டார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், வாட்ஸ்அப் மூலமாகவும் அவர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

கடந்த மார்ச் 26-ம் தேதி, இந்தப் பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியது. மணப்பெண் வீட்டார் மணமகனின் வீட்டுக்குச் சென்று ஆபாசமாகத் திட்டியதோடு, அங்கிருந்த பி.என்.ஜி (PNG) எரிவாயு குழாயைச் சேதப்படுத்தி, ஒட்டுமொத்த குடும்பத்தையும் உயிரோடு எரிக்க முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, மணமகன் வீட்டார் போலீசாருக்குத் தகவல் கொடுத்ததால், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தற்போது போலீசார் மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நேரலையில் சிக்கிய 'செல்போன்' சர்ச்சை: ராஜஸ்தான் ராயல்ஸ் மேலாளர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை?

ஐபிஎல் 2026 தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த அணியின் மேலாளர் ரோமி பிந்தர், போட்டியின்போ... மேலும் பார்க்க

நர்மதா நதிக்கு 11,000 லிட்டர் பால் அபிஷேகம்; வைரலான வீடியோ... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்வதென்ன?

நர்மதா நதியில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கொட்டப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது ஒருபுறம் மத நம்பிக்கை குறித்த விவாதத்தையும், மறுபுறம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக அக்கறை குறி... மேலும் பார்க்க

Trisha: ``தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டேன்..." - பதிலடி பதிவு

சமீபகாலமாக தொடர்ந்து நடிகை த்ரிஷா தொடர்பான செய்திகள் வைரலாகி வருகின்றன. பிரபல நடிகர் ஒருவருடன் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டதில் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்களின் விமர்சனங்கள் வரை நடந்தது. இந்த நில... மேலும் பார்க்க

பிங்க் யானை: ரஷ்யப் புகைப்படக் கலைஞரின் வைரல் 'கலை' முயற்சிக்குக் கிளம்பிய எதிர்ப்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், கலைத் திட்டம் என்ற பெயரில் யானை ஒன்றிற்கு அடர் இளஞ்சிவப்பு (Dark Pink) வண்ணம் தீட்டிப் புகைப்படம் எடுத்த ரஷ்யப் புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவாவின் செயல், சமூக வலைதளங... மேலும் பார்க்க