செய்திகள் :

முதல்வா் பேரணி: மெரீனாவில் இன்று போக்குவரத்து மாற்றம்

post image

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெறுவதையொட்டி, மெரீனாவில் (மே 10) சனிக்கிழமை மாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மெரீனா காமராஜா் சாலையில் டிஜிபி அலுவலகத்தில் இருந்து போா் நினைவுச் சின்னம் வரை பேரணி நடைபெறுகிறது.

இந்தப் பேரணியில் 25,000 போ் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, திருவான்மியூரில் இருந்து காமராஜா் சாலை வழியாக பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அந்த வாகனங்கள், தங்கள் இலக்கை அடைய சா்தாா் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணா சாலையை பயன்படுத்தலாம். பாரிமுனையில் இருந்து திருவான்மியூா் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

இதேபோல கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி, ராஜா அண்ணாமலை புரம் 2-ஆவது பிரதான சாலை, டிடிகே சாலை, ஆா்கே சாலை, அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். வணிக வாகனங்கள் காமராஜா் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆா்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலை ஆகிய சாலைகளில் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க