செய்திகள் :

மும்பை: கணவன் துணையோடு காதலன் கொலை; டிரம்மில் அடைத்து சாக்கடையில் வீசிய பெண் சிக்கியது எப்படி?

post image

டிரம் கொலைகள் பற்றி உத்தரப் பிரதேசத்தில் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மும்பையில் தற்போது அது போன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.

மும்பை அருகில் உள்ள மும்ப்ரா என்ற இடத்தில் வசித்தவர் அர்பாஸ் அலிகான். இவர் வேலைக்குச் செல்வதாக தனது வீட்டில் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு இறுதியில் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அர்பாஸ் கடைசியாக அங்குள்ள வசாய் கடற்கரை பகுதியில் நின்றது, அவரது மொபைல் போன் சிக்னல் மூலம் தெரிய வந்தது.

அதேநேரத்தில் அர்பாஸ் காதலித்த மஜபீன்ஷேக் என்பவரின் போன் சிக்னலும் அதே இடத்தில் காட்டியது.

இதையடுத்து மஜபீனைப் பிடித்து சென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் ஆரம்பத்தில் எதையும் சொல்ல மறுத்தார். ஆனால் அதன் பிறகு உண்மையை ஒப்புக்கொண்டார். மஜபீன் தனது காதலனை மிரட்டி பணம் பறிக்க தனது கணவனோடு சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.

கணவன் துணையோடு காதலன் கொலை
கணவன் துணையோடு காதலன் கொலை

இதற்காக மஜ்பீன் தனது காதலனுக்கு போன் செய்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அர்பாஸ் அலியும் அப்பெண் சொன்ன இடத்திற்குச் சென்றார். அங்கு மஜ்பீனுடன் அவரது கணவன் மற்றும், அவரது சகோதரர் உட்பட 4 பேர் இருந்தனர். அவர்கள் அர்பாஸிடம் பணம் கேட்டனர்.

ஆனால் அவரிடம் பணம் இல்லை. இதனால் கோபத்தில் நான்கு பேரும் சேர்ந்து அர்பாஸை பிளாஸ்டிக் பைப்பால் அடித்து உதைத்தனர். இதில் அர்பாஸ் இறந்து போனார்.

இதையடுத்து ஆதாரத்தை அடியோடு மறைப்பதற்காக அர்பாஸ் உடலை பிளாஸ்டிக் பச்சை கலர் டிரம் ஒன்றை வாங்கி அதில் உடலை வைத்து அங்குள்ள சாக்கடையில் தூக்கிப் போட்டுவிட்டனர் என்று விசாரணையில் தெரிய வந்தது.

இதில் மஜ்பீன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸாரின் விசாரணையில் மஜபீனுடன் கடந்த 2021ம் ஆண்டில் இருந்து அர்பாஸ் திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். பொறியாளரான அர்பாஸ் அடிக்கடி மஜ்பீனுக்கு பணம் அனுப்பிக்கொண்டிருந்தார்.

அதோடு இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர். ஆனால் திடீரென அர்பாஸ் பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். இதையடுத்து தனது கணவர் ஹசன் ஷேக்குடன் சேர்ந்து அர்பாஸைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

வாடகைக்கு பதிலாக மனைவி, 13 வயது மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தந்தை; குஜராத்தில் அதிர்ச்சி

குஜராத் மாநிலம் மொர்பி என்ற இடத்தில் வசித்து வந்தவர் நரேந்திரா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 45 வயதாகும் நரேந்திரா தனது மனைவி, மகளுடன் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார். வீட்டிற்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடு... மேலும் பார்க்க

திருவாரூர்: தலைக்கேறிய கஞ்சா போதை; தாத்தா பாட்டியை கொன்று தீ வைத்த பேரன்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் வடுவூர் காரக்கோட்டை புதுத்தெருவில் முத்து(73)-சந்திரா(70) தம்பதியினர் வசித்து வந்தனர்.இவர்களுக்கு கலியபெருமாள் என்ற மகனும், அய்யப்பன்(30) என்ற பேரனும் உள்ளனர்.க... மேலும் பார்க்க

நெல்லை: மதுபோதையில் தகராறு; நண்பரைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பொதிகையடியைச் சேர்ந்தவர் வனராஜ். இவர், கடந்த 12-ம் தேதி பாபநாசம், லோயர் கேம்ப் வனப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வருவதாகக்கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீ... மேலும் பார்க்க

நீட் தேர்வு வினாத்தாள் கசிய காரணமான புனே பேராசிரியர் கைது; சிக்கியது எப்படி? வெளியான பகீர் பின்னணி

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இம்மாத தொடக்கத்தில் நடந்தது. ஆனால் இத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தேர்வுக்கான வினாத்தாள் மாணவர்களிடையே கசிந்தது. இது தேர்வு நடந்து முடிந்த பிறகுதான் வ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ; தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய பள்ளி மாணவர்கள் கைது

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ எடுத்து, அம்மாணவியின் தந்தையிடம் ரூ. 10 லட்சம் கேட்ட 3 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை... அம்பத்தூரில் பயங்கரம்!

சென்னை அம்பத்தூர், சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). இவரின் கணவர் தாமோதரன். சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதியினருக்கு 6 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும... மேலும் பார்க்க