செய்திகள் :

மும்பை: காவல் நிலைய வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்; காவலர் கைது!

post image

மும்பை அருகில் போலீஸில் வாக்குமூலம் கொடுக்க வந்த பெண்ணை வாக்குமூலம் வாங்கிய கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள பால்கர் என்ற இடத்தில் இருக்கும் காசா காவல் நிலையத்தில் 21 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அப்பெண்ணுக்குத் திருமணமான ஒருவருடன் தகாத உறவு இருந்தது. இது அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியதால் அந்த நபர் மீது 21 வயது பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார்.

இது குறித்து விசாரிப்பதற்காக இரண்டு பேரையும் போலீஸார் வரவழைத்து இருந்தனர். அப்பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவர் தனது மனைவியையும் அழைத்து வந்திருந்தார். காவல் நிலையத்தில் மூன்று பேரும் சந்தித்துக்கொண்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கான்ஸ்டபிள் ரஞ்சித் (41) தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து அடுத்த நாள் வாக்குமூலம் கொடுக்க வரும்படி 21 வயது பெண்ணிடம் ரஞ்சித் கேட்டுக்கொண்டிருந்தார்.

அப்பெண் காவல் நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் நயமாக பேசி அவரைக் காவல் நிலையத்திற்கு பின்புறம் இருந்த கான்ஸ்டபிள்கள் அறைக்கு, ரஞ்சித் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அப்பெண்ணை ரஞ்சித் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இதையடுத்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் ரஞ்சித் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் கொடுக்க வந்தாரா அல்லது விசாரணை குறித்து தெரிந்துகொள்ள வந்தாரா என்பது குறித்து விசாரித்து வருவதாக தேஷ்முக் தெரிவித்தார்.

சம்பவம் நவம்பர் 26-ம் தேதி நடந்துள்ளது. ஆனால் வழக்கு டிசம்பர் 8-ம் தேதி பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணை பாரபட்சம் இன்றி நடைபெற வழக்கு வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதோடு காசா காவல் நிலைய பொறுப்பாளரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடையநல்லூர்: தையல் மெஷின் பெல்ட்டால் மனைவியைக் கொன்ற நபர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலித்தநல்லூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன், வெள்ளதாய் தம்பதியினரின் மகள் வேல்மதிக்கும், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரு... மேலும் பார்க்க

பெண் எரித்துக் கொலை; நான்கு மனைவிகளுடன் வாழ்க்கை - முன்னாள் காவலர் கைதான அதிர்ச்சி பின்னணி!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணை பகுதியில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் கடந்த 5-ஆம் தேதி பிணமாக கிடந்தார். அங்கு கால்நடைகளை மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க

திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்... மேலும் பார்க்க

குமரி: தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா பெயரில் 'போதை கூடுகை'- 7 பேரை கைதுசெய்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றின் கரை ஓரமாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படு... மேலும் பார்க்க

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர... மேலும் பார்க்க

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச்... மேலும் பார்க்க