செய்திகள் :

மேற்கு நாடுகளில் எறும்பை வேடிக்கை பார்ப்பது ஒரு 'Hobby' - என்னது, ஒரு எறும்பின் விலை ரூ.21,000-ஆ?

post image

'சாதாரண' எறும்பு என்று நாம் நினைக்கும் உயிரினம் விலை உயர்ந்த ஒன்றாக இருக்கிறது.

கருப்பு சந்தையில் ஒரு ராணி எறும்பு ரூ.10,000 முதல் ரூ.21,000 வரை விலை போவதாகத் தெரிகிறது.

கடந்த மார்ச் மாதம், கென்யா நாட்டின், ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளைச் சோதனை செய்து கொண்டிருந்த அதிகாரிகள் ஒரு பையைத் திறந்தபோது ஆச்சரியமடைந்துள்ளனர்.

ராணி எறும்பு
ராணி எறும்பு

அந்தப் பையின் உள்ளே சிறிய சோதனை குழாய்களில் ஈரமான டிஷ்யூ சுற்றி வைக்கப்பட்ட நிலையில், உயிருடன் இருந்த சுமார் 2,200 எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ராணி எறும்புகள்.

இந்த எறும்புகளைக் கடத்த முயன்றவர் சீனாவைச் சேர்ந்த ஜாங் கீகுன்.

மேற்கத்திய நாடுகளில் உள்ள எறும்பு வளர்ப்பு ஆர்வலர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் இவற்றை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

மேற்கு நாடுகளில் எறும்புகளை அக்ரிலிக் பெட்டிகளில் வளர்த்து, அவற்றின் செயல்பாடுகளைப் பார்ப்பது ஒரு பிரபலமான ஹாபியாக உள்ளது.

ஒரு புதிய எறும்புக் கூட்டத்தைத் தொடங்க ராணி எறும்பு அவசியம் என்பதால், இவற்றிற்கான தேவை அதிகமாக உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த கென்யா நீதிமன்றம், ஜாங் கீகுனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 10 லட்சம் கென்ய ஷில்லிங் அபராதமும் விதித்தது.

எறும்புகளை கடத்துவதால் என்ன பிரச்னை?

இந்த எறும்புகள் அனைத்தும் ராணி எறும்புகள். ஒரு ராணி எறும்பு மட்டும் இருந்தாலும், அது முட்டையிட்டு ஒரு முழு எறும்புக் கூட்டத்தை உருவாக்க முடியும்.

ராணி எறும்பு
ராணி எறும்பு

இந்த எறும்புகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அதிக அளவில் எடுத்துச் சென்றால், அந்த இடத்தில் எறும்புகளின் எண்ணிக்கை குறையும்.

அதனால் அங்குள்ள மண் நிலை மற்றும் பூச்சிகளின் கட்டுப்பாடு போன்ற இயற்கைச் செயல்களில் பாதிப்பு ஏற்படும்.

அதே நேரத்தில், இந்த எறும்புகளை வேறு நாட்டிற்கு கொண்டு சென்றால், அங்கு இயல்பாக இல்லாத புதிய எறும்புகள் வளரத் தொடங்கும்.

அவை அங்குள்ள பிற உயிரினங்களுடன் போட்டி போட்டு, அவர்களின் வாழ்க்கையையும் பாதிக்கலாம்.

இதனால், எறும்புகள் எடுத்துச் செல்லப்பட்ட இடமும், கொண்டு செல்லப்பட்ட இடமும் — இரண்டிலும் இயற்கை சமநிலை மாறும்.

மேலும், எறும்புகள் மண்ணின் தரத்தை மேம்படுத்தவும், சில பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

இந்தச் சம்பவம், சிறிய உயிரினங்கள் கூட, சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது.

`சுற்றுச்சூழலின் Bio Indicators'- தனித்துவமான புலி வண்டுகள் குறித்து விளக்கும் பல்லுயிர் ஆய்வாளர்கள்

இவ்வுலகில் வாழும் அத்தனை உயிர்களும் சூழலியலோடு ஒன்றி இயங்குவதோடு மட்டுமன்றி, சுற்றுச்சூழலின் நிலையையும் உயிர் காட்டியாக (Bio indicators) இருந்து சுட்டுகின்றன.மழை வருவதை முன்கூட்டியே உணர்த்தும் தும்பிக... மேலும் பார்க்க

``தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 'El Nino' தீவிரம் அடைய வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் 'எல் நினோ' (El Nino) காலநிலை மாற்றம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது தீவிரமடைந்து ... மேலும் பார்க்க

Philliphines-ல் சக்திவாய்ந்த நில நடுக்கம்: ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸ் நேரப்படி, இன்று காலை 7.40 மணிக்கு, பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான மிண்டானாவில் 7.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதையொட்டி, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில... மேலும் பார்க்க

சூரியனில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 வெடிப்புகள்! - சிக்கலை சந்தித்த ரேடியோ சேவைகள்; என்ன நடந்தது?

சூரியனில் இந்த வாரம் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள், அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த சூரியப் புயல்களை (Solar Flares) பூமிக்கு நேராக அனுப்பி வைத்துள்ளது. இதன் காரணமாக, பூம... மேலும் பார்க்க