செய்திகள் :

மேலூர் இளைஞர் மரணம்: நிபுணர் குழு மூலம் உடற்கூறாய்வு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த கவிதா, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எனது மகன் சீமைராஜா. கடந்த ஜூலை 4-ல் மேலூர் காவல் ஆய்வாளர், என் மகன் சீமைராஜாவைத் தேடி என் வீட்டுக்கு வந்தார். எதற்காகத் தேடுகிறீர்கள் எனக் கேட்ட போது மேலூர் பகுதியில் திருட்டில் ஈடுபட்டதற்காக மகனைத் தேடுவதாகக் கூறினார்.

ஜூலை 6-ம் தேதி காலை 9 மணி அளவில் மேலூர் காவல் ஆய்வாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சாலை விபத்தில் சீமைராஜா இறந்து விட்டதாகவும், அவர் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறினார்.

நாங்கள் சென்று பார்த்தபோது உடலில் எந்தக் காயங்களும் இல்லை. சீமைராஜவுடன் சென்ற மற்றொரு நபரான சூர்யாவைச் சந்திக்க போலீஸார் அனுமதிக்க மறுக்கிறார்கள். என் மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனது மகனின் உடலை மூத்த தடயவியல் நிபுணர் குழுவை வைத்து உடற்கூறாய்வு செய்யவும், உடற்கூறாய்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்யவும், மேலூர் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

சீமைராஜா
சீமைராஜா

இம்மனுவை நீதிபதி எஸ்.விக்டோரியா கௌரி விசாரித்தார். அரசு தரப்பில், 'சாலை விபத்தில் உயிரிழந்தவருடன் சென்ற நபர், காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்' எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் அவரது வழக்கறிஞருடன் சென்று, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரைப் பார்த்து பேசவும், பின்னர் தேவை எனில் இவ்வழக்கைத தொடர்ந்து நடத்தலாம்' எனக் கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.

'எம்எல்ஏ-க்களை வாங்குவதில் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து..!'- முதல்வரைச் சாடும் உதயநிதி

‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும், ‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் கர்நாடக நீர் பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் ... மேலும் பார்க்க

``முதல்வரின் நேரடிப் பொறுப்பு துறையிலேயே ஊழல் நடைபெறுகிறது" - சு.வெங்கடேசன் ஆவேசம்!

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் பெரும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேச... மேலும் பார்க்க

இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தைப் புறக்கணித்த ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி; தவெக-வில் ஐக்கியமாகிறாரா?

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னை அதிமுக தலைமையகத்தில் நடந்த கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை, ஓசூர் எம்.எல்.ஏ பாலகிருஷ்ண ரெட்டி புறக்கணித்தது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.எடப்ப... மேலும் பார்க்க

`ஸ்டாலின் படத்தை குப்பையில் வீசிய தி.மு.க புள்ளி!' டு `தனுஷ் புது கட்சி?' | கழுகார் அப்டேட்ஸ்

காரியத்தை சாதித்த வைகைச் செல்வன்!"முதல்வர் முன்னால்தான் இணைவேன்..."அ.தி.மு.க-விலிருந்து விலகிய பலரும், த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் முன்னிலையில், கட்சியில் இணை... மேலும் பார்க்க

"வடத்துருவமும், தென் துருவமும் சேர முடியுமா?" - திருமாவளவன் கருத்துக்கு வைகோ பதில்

திமுக-வுடன் நட்புடன் தொடர்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்ததற்காக அவருக்கு `நோபல் பரிசே தரலாம்' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலாக தெரிவித்தார். `தனக்கு நோபல் பரிசு கிடைக்க பர... மேலும் பார்க்க

``அனுமனாக `ராமபிரான்’ ஜோசப் விஜய்யிடம் சேர்ப்போம்!’’ - சம்பவம் செய்த தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள்!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், அதன்பிறகு ஆட்சியைப் பிடித்த த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்தது. அதற்கு பதிலுதவியாக கிள்ளியூர் தொகுதியின் எம்.எல்.ஏ ... மேலும் பார்க்க