செய்திகள் :

'ராகி கூழ், கம்பு கூழ்... செய்த 1-3 மணிநேரத்திற்குள் குடித்துவிட வேண்டுமா?'- டாக்டரின் அட்வைஸ் என்ன?

post image

தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்தாலும், இன்னும் வெயிலும், வெப்பமும் நீங்கவில்லை.

தமிழ்நாட்டில் எப்போதும் வெயில் சீசனையும், கூழையும் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட கூழ் எப்படிக் குடிப்பது நல்லது... எப்போது குடிக்கலாம் என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா.

“தமிழர் உணவுப் பாரம்பர்யத்தில் சிறுதானியங்களுக்குத் தனி இடமுண்டு. கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அதிகமாக கூழ் தயாரிக்கப் பயன்படுத்துவர்.

இவற்றை மாவாக அரைத்து, இரவு முழுவதும் நொதிக்கவிட்டு காலையில் காய்ச்சிக் கூழாகத் தயாரிப்பார்கள். இவ்வாறு நொதிக்கவிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் எளிதாகக் கிரகிக்கப்படும்.

சித்த மருத்துவர் சங்கீதா
சித்த மருத்துவர் சங்கீதா

மேலும், வயிற்றில் நல்ல நுண்ணுயிரிகளை வளர்க்கும் ‘ப்ரோபயாட்டிக்’ தன்மையும் இதில் உள்ளது. உடலுக்குக் குளிர்ச்சி தருவதால் கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்ற உணவாக இது கருதப்படுகிறது.

முதுவேனில் காலத்தில் வெயிலும், இடையிடையே மழையும் இருப்பதால் உடலில் சூடு அதிகரிக்கும். அந்த நேரத்தில் அம்மை போன்ற வைரஸ் நோய்களும் பரவக்கூடும்.

உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் வெப்பமும் உயரும்.

இதனால் கொப்பளங்கள் ஏற்படுகின்றன. உடல் சூட்டைக் குறைக்க அதிகமாகத் தண்ணீர் அருந்துதல், பழங்கள், மோர், இளநீர், கூழ் போன்றவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.

பழங்காலத்தில் மக்கள் அதிக தூரம் நடைபயணம் மேற்கொண்டனர். உடல் சோர்வு மற்றும் வெப்பத்தைக் குறைக்க சாலையோரங்களில் பந்தல் அமைத்து இலவசமாக கூழ் வழங்கும் பழக்கமும் இருந்தது.

கேழ்வரகில் அரிசியைவிட பல மடங்கு கால்சியம் உள்ளது. கம்பில் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புச் சத்து காணப்படும்.

இது மூலநோய்க்கு நல்லது. கர்ப்பிணிகளுக்கும் எளிதில் செரிக்கும் உணவாகும். ஆனால், தோல் அரிப்பு அல்லது சிரங்கு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கம்பை அளவோடு சாப்பிடுவது நல்லது.

கம்மங் கூழ்
கம்மங் கூழ்

அதேபோல், அதிகமாகப் புளித்த கூழ் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், 3 முதல் 12 மணி நேரம் வரை ஊறவைத்து நொதித்த கூழ்தான் உடலுக்கு நல்லது. முறையாக நொதிக்காத கூழை அருந்தினால் வாந்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

கூழைக் காய்ச்சிய பிறகு 1 முதல் 3 மணி நேரத்துக்குள் அருந்துவது நல்லது. மோர் சேர்க்காமல் கட்டியாக உருட்டி வைத்தால், அதை ஒரு நாள் வரை பாதுகாத்து பின்னர் கரைத்துச் சாப்பிடலாம்.

சிலருக்கு முதன்முறையாக கூழ் குடிக்கும்போது உடல் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தவிர்க்கலாம். சிறு குழந்தைகளுக்கு கூழின் சுவை உடனே பிடிக்காமல் இருக்கலாம். சேர்ப்பது சிரமமாக இருக்கலாம். பொதுவாக 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்” என்றார்.

Doctor Vikatan: விபத்தில் துண்டான விரல்... மீண்டும் ஒட்டவைக்க முடியுமா?

Doctor Vikatan: சமீபத்தில் நான் சாலையில் கண்ட காட்சி இது. இரண்டு டூ வீலர்கள் மோதிக் கொண்டவிபத்தில் ஒருவரது விரல் துண்டாகிவிட்டது. அந்தத் துண்டான விரலை மீண்டும் தைத்து ஒட்ட வைக்க முடியுமா... அதை எப்படி... மேலும் பார்க்க

Doctor Vikatan: 10 வயது மகனுக்கு தேர்வு நெருங்கினால் வயிற்றுப்போக்கு... தானாகச் சரியாகுமா?

Doctor Vikatan: என் மகனுக்கு 10 வயதாகிறது. பள்ளிக்கூடத்தில் தேர்வு நெருங்கினாலே அவனுக்கு வயிற்றுப்போக்குஆரம்பித்து விடுகிறது. பயத்தினால் இப்படி ஆகுமா... இதற்கு என்ன செய்வது, தானாகச் சரியாகுமா?பதில் சொ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்களில் தெரியும் புள்ளி.... பூச்சி பறக்கும் உணர்வு... பார்வை பாதிக்குமா?

Doctor Vikatan:எனக்குக் கடந்த சில மாதங்களாக கண்ணில் கறுப்புப் புள்ளிகள் அல்லது பூச்சிகள் பறப்பது போல் தெரிகிறது. இது அவ்வப்போது தோன்றுகிறது... பிறகு தானாக மறைகிறது. இந்தப் பிரச்னையயால் கண் பார்வைபாதிக... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி ஏற்படும் விக்கல்... மரணத்தை ஏற்படுத்துமா?

Doctor Vikatan:எனக்கு அடிக்கடி விக்கல் எடுக்கிறது. தண்ணீர் குடித்தாலும் நிற்பதில்லை. சில சமயங்களில் 2 நாள்களுக்குக்கூட தொடர்கிறது. இது போன்று அடிக்கடி ஏற்படும் விக்கல் மரணத்தை ஏற்படுத்துமா?பதில் சொல்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடலில் சோடியம் குறைந்தால் கோமா நிலைக்குப் போவார்களா?

Doctor Vikatan:உணவில் உப்பை முற்றிலும் தவிர்த்தால் உடலில் சோடியம் குறைந்து கோமாவுக்குச் செல்ல வாய்ப்பு உண்டா... சோடியம் குறைந்தால் அதை எப்படிச் சமாளிப்பது... சிகிச்சைகள் உண்டா?பதில் சொல்கிறார், சென்னை... மேலும் பார்க்க

Doctor Vikatan: மூக்கில் வளர்ந்துள்ள சதை... ஆபரேஷன் இல்லாமல் கரைக்க முடியுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக மூக்கில் அரிப்பு, தண்ணீர் வடிவது போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அலர்ஜி என விட்டுவிட்டேன். பிறகு மருத்துவரைச் சந்தித்துக் கேட்டபோது என் மூக்கில் ச... மேலும் பார்க்க