செய்திகள் :

மைதானத்திற்குள் நுழைந்து பேசிய இளவரசர்; ரத்தான கோல்: 1982 உலகக் கோப்பையின் மறக்க முடியாத சர்ச்சை!

post image

கால்பந்து போட்டிகளில் நடுவரின் முடிவை மாற்றுவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால், ஒரு நாட்டின் இளவரசரே மைதானத்திற்குள் இறங்கி வாக்குவாதம் செய்தால் என்னவாகும்? அப்படியொரு நம்பமுடியாத சம்பவம் 1982-ம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த உலகக் கோப்பையில் அரங்கேறியது.

குழப்பத்தை ஏற்படுத்திய விசில் சத்தம்!

அது பிரான்ஸ் மற்றும் குவைத் அணிகளுக்கு இடையேயான ஒரு முக்கியமான லீக் போட்டி. ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஏற்கனவே 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அப்போது, பிரான்ஸ் அணி நான்காவதாக ஒரு கோலை அடித்தது. ஆனால், அந்தக் கோல் அடிக்கப்பட்டபோது குவைத் வீரர்கள் ஆட்டத்தை நிறுத்தியிருந்தனர். காரணம், கூட்டத்தில் இருந்து வந்த ஒரு விசில் சத்தத்தை, நடுவர் ஊதியதாக நினைத்து அவர்கள் குழப்பமடைந்தனர். இது அநியாயம் என்று கூறி, நடுவரிடம் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

FIFA

மைதானத்திற்குள் நுழைந்த ஷேக்!

வீரர்கள் நடுவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத ஒரு நபர் மைதானத்திற்குள் நுழைந்தார். அவர், குவைத் நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் ஃபஹத் அல்-அஹ்மத் அல்-ஜபர் அல்-சபா (இளவரசர் ஃபஹித்). வீரர்களின் போராட்டத்தைக் கண்ட அவர், நேரடியாக ஆடுகளத்திற்குள் வந்து நடுவருடன் பேசத் தொடங்கினார். ஒரு உலகக் கோப்பை போட்டியின்போது, அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து நடுவரின் முடிவுக்கு சவால் விடுத்தது, ஒட்டுமொத்த கால்பந்து உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மாற்றப்பட்ட தீர்ப்பு... ஆனாலும் தோல்வி!

இளவரசரின் தலையீட்டிற்குப் பிறகு, நடுவர் ஒரு வியத்தகு முடிவை எடுத்தார். பிரான்ஸ் அணி அடித்த நான்காவது கோலை அவர் ரத்து செய்வதாக அறிவித்தார். கால்பந்து வரலாற்றில், ஒரு நடுவர் தனது முடிவை இத்தகைய அழுத்தத்தின் காரணமாக மாற்றிக்கொண்டது இதுவே முதல்முறை. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இருப்பினும், கோல் ரத்து செய்யப்பட்ட போதிலும், ஆட்டத்தின் இறுதியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆனாலும், அந்த வெற்றிக்குப் பதிலாக, இளவரசரின் தலையீடும், ரத்து செய்யப்பட்ட கோலும்தான் இன்றுவரை அந்தப் போட்டியின் அடையாளமாக நிலைத்து நிற்கிறது.

FIFA: கத்தார் அணியில் ஒரு கண்ணூர் புயல்! தந்தையின் கனவை சுமந்து உலகக்கோப்பையில் களம்காணும் மலையாளி!

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா வந்துவிட்டாலே போதும், கேரளா மாநிலமே ஒரு கால்பந்து மைதானமாக மாறிவிடும். அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல், இங்கிலாந்து என உலகின் முன்னணி அணிகளின் கொடிகள் தெருவெங்கும் பட... மேலும் பார்க்க

பிரேசில் ஃப்ரீகிக்... திடீரெனப் பாய்ந்து பந்தை உதைத்த எதிரணி வீரர்! 1974 உலகக்கோப்பையின் விநோத நொடி!

உலகக்கோப்பை கால்பந்து வரலாறு விசித்திரமான தருணங்கள் பலவற்றைக் கண்டிருக்கிறது. ஆனால், சில சம்பவங்கள் வெறும் விசித்திரமாக மட்டுமல்லாமல், அதன் பின்னால் ஒரு பெரிய கதையையும் சுமந்து நிற்கும். அப்படியான ஒரு... மேலும் பார்க்க

FIFA : காலில் ஷூ இல்லை என்பதுதான் காரணமா? 1950 உலகக் கோப்பையை இந்தியா தவறவிட்டதன் சொல்லப்படாத கதை!

இந்திய கால்பந்து வரலாறு, தவறவிடப்பட்ட வாய்ப்புகளாலும், நிறைவேறாத கனவுகளாலும் நிரம்பியது. அதில், 1950-ல் நடந்த ஒரு சம்பவம், இன்றுவரை ஒரு தீராத வலியாக, 'என்ன நடந்திருக்கும்?' என்ற கேள்வியாக நிலைத்து நிற... மேலும் பார்க்க

FIFA: 6.1 கிலோ தங்கம்; திருட்டு, சேதம்... கையால் தொட முடியாது? - உலகக் கோப்பையின் அறியா பக்கங்கள்!

கால்பந்து உலகக் கோப்பை. இது வெறும் விளையாட்டுப் போட்டியின் வெற்றிச் சின்னம் மட்டுமல்ல. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை, உலகமே வெறித்தனமாகக் கொண்டாடும் ஒரு திருவிழாவின் மகுடம். பிரேசில், ஜெர்மனி,... மேலும் பார்க்க

GOAT-ன் ஆட்டம் தொடரும்... வரலாற்றில் புதிய மைல்கல்; உலகக் கோப்பையில் களமிறங்குகிறார் மெஸ்ஸி!

கால்பந்து உலகின் சகாப்தம் முடிந்துவிடவில்லை. லயோனல் மெஸ்ஸியின் கால்கள் இன்னும் ஓயவில்லை. கத்தாரில் உலகக் கோப்பையை வென்ற பிறகு, அதுவே ஆவரின் கடைசி உலகக் கோப்பை எனப் பலரும் கருதிய நிலையில், அந்த யூகங்கள... மேலும் பார்க்க

FIFA: கப்பல் பயணம், ஒற்றைக் கை கோல், துப்பாக்கியுடன் ரசிகர்கள்! முதல் உலகக் கோப்பையின் கதை தெரியுமா?

முதல் உலகக்கோப்பைFIFA World cup Diariesஇன்று உலகமே கொண்டாடும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அத்தியாயம், பல ஆச்சரியங்களும், சுவாரஸ்யங்களும், ஏன்... அச்சமூட்டும் சம்பவங்களும் நிறைந்தது. நா... மேலும் பார்க்க