செய்திகள் :

`மொழி எனும் பண்பாட்டு சொத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும்..!' - எழுத்தாளர் மகுடேஸ்வரன்

post image

சென்னையில் 49 வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக வெளியீட்டு நிகழ்வுகளும், எழுத்தாளர்களின் வருகையும்... வாசகர்களின் புத்தக நுகர்வும் புத்தகக் காட்சிக்கு வலுசேர்க்கின்றன. அந்த வகையில் எழுத்தாளரும் மொழி அறிஞருருமான மகுடேஸ்வரன், பிற மொழி கலப்பில்லாமல் மொழியைக் கையாள வேண்டியதன் தேவை குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

``மொழி என்பது தனித்து இயங்குவது. ஒவ்வொன்றும் ஒரு மொழி. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு செரிமான அமைப்பு உள்ளது. மொழி என்பது பண்பாட்டுச் சொத்து. குறிப்பாக தமிழ் மொழி பத்தாயிரம் ஆண்டுகள் பழைமையானது. இதுவரை தனித்து நின்றே இவ்வளவு தூரம் பயணித்துள்ளது.

இதன் தனித்தன்மையைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் செல்வதுதான் உங்கள் கடமை. மொழியைக் கலப்பு செய்தோ, சிதைத்தோ பிற மொழிகளின் ஆதிக்கத்தை உள் இழுத்துக் கொண்டோ அடுத்த தலைமுறைக்கு இந்த மொழியை விட்டுச் செல்லலாமா? இது எப்படி ஓர் அறிவுடைமை ஆகும்? மொழியின் எல்லா நுண்ணியக்கூறுகளும் காப்பாற்றப்பட வேண்டிய உலகத்திற்குத்தான் நாம் செல்ல வேண்டும்.

தமிழர்களின் கடமை என்னவென்றால் அழகான, அரிதான, தனித்தன்மைமிக்க, காப்பாற்றப்பட வேண்டிய, எல்லா தொன்மைகளையும் நாம் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும். முன்பு தமிழ் மொழி வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியது. தற்போது தொழில்நுட்ப யுகத்தில் குறிப்பாக வாட்ஸ் அப்பில் தங்கிலீஷுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது.

எந்த நாட்டில் மொழிக் கலப்போடு பேசிக் கொண்டிருக்கிறார்கள்? ஜப்பானில் அவர்கள் ஜாப்பனீஷ் மொழியைக் காப்பாற்றுகிறார்கள். சீனாவில் சைனீஷைக் காப்பாற்றுகிறார்கள். அதுபோல தமிழையும், தமிழ் மொழியையும் யார் கையாள்கிறார்களோ, அவர்கள்தான் அந்த மொழியைக் காக்க வேண்டும். மொழிக் கலப்பு, மொழி சிதைவடைந்து அழிவுக்கு வித்திடும். இது அறிவுடையோர் செய்யும் காரியம் அல்ல.

இயற்கையைச் சுரண்டுபவர்களுக்கும் மொழிக் கலப்பைக் கையாளுபவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. மொழியைக் கலப்பில்லாமல் இலக்கணக் கட்டமைப்போடு எழுத வேண்டும். அதற்கு அ.கி பரந்தாமனர் எழுதிய "நல்ல தமிழ் எழுத வேண்டுமா?"என்ற புத்தகம். பிறகு என்னுடைய "தமிழறிவோம்" நூல். இவை மிகவும் பயனுள்ள புத்தகங்கள். தேவநேயப் பாவனார் எழுதிய மொழி குறித்தான நூல்கள் பற்றிப் படிக்கலாம். இதில் அதிக அளவிலான மொழி பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

இவை மட்டும்தான் என்று இல்லை. மொழி எப்படி இயங்குகிறது என்பதைக் கண்டறிந்தால் பிழை இல்லாமல் எழுத முடியும். கலப்பில்லாத பிழையில்லாத மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்" என்றார் அழுத்தமாக.

Chennai Book Fair: எழுத்தாளர் ஆ.இரா.வெங்கடாச்சலபதி பரிந்துரைக்கும் `5' புத்தகங்கள்!

நூற்றுக்கணக்கான அரங்குகள், புதிய வெளியீடுகள், அரங்குகள் நிறையும் வாசகர் கூட்டம் என, சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் காட்சி, பரபரத்துக் கொண்டிருக்கிறது.முக்கியமாக இந்தக் கண்காட்... மேலும் பார்க்க

`பெண்கள் துணிந்து பேசினால்தான், தீர்வு கிடைக்கும்!' - இளம் எழுத்தாளர் வெண்பா

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49-வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகக் காட்சியில், இளம் எழுத்தாளர் வெண்பா எழுதிய நூல்கள் மற்றும் கவிதை தொகுப்பு, `Her Stories' பதிப்பக அரங்க... மேலும் பார்க்க

இளைஞர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம் - இளம் தலைமுறையினரிடையே எப்படி இருக்கிறது புத்தக ரசனை?!

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று வார இறுதி நாள் என்பதால், இளைஞர்களின் கூட்டமும் அலைமோதியது. சரி, இந்த புத்தகத் திருவிழாவில் இளைஞர்களின் சாய்ஸ் என்னவாக இ... மேலும் பார்க்க

`நம் கண்ணுக்கு தெரியாமல் அரூபமாக வாழும் மனிதர்களின் கதை' - எழுத்தாளர் ஜெயராணியின் பரிந்துரைகள்!

சென்னையில் நடைபெற்று வரும் 49-வது புத்தகத் திருவிழாவில், வார இறுதிநாள் என்பதால் வாசகர்கள் கூட்டம் களைகட்டியது.அங்கு வாசகர்களால் சூழப்பட்டிருந்த, விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை தனது எழுத்துகளில் தொடர்... மேலும் பார்க்க

`வாசிப்புப் பழக்கம் தொடர்வது மகிழ்ச்சி' - பவா செல்லதுரை பரிந்துரைக்கும் 3 நூல்கள்!

கோலாகலமாக நடைபெற்று வரும் 49-வது சென்னை புத்தக கண்காட்சியில், வார இறுதியில் குவிந்த வாசக கூட்டத்திற்கு மத்தியில், தனசீலி திவ்யநாதன் எழுதிய ஏவாளும் சாராளும் நூல் வெளியீட்டு நிகழ்வு, Her Stories அரங்கில... மேலும் பார்க்க

சென்னை புத்தக கண்காட்சியில் ஒரே இடத்தில் ஆதார், தபால், மை ஸ்டாம்ப் சேவைகள்! - சூப்பர் வரவேற்பு!

இன்று வங்கி கணக்கு தொடங்குவதிலிருந்து பலதரப்பட்ட பொது மக்கள் சேவைகள் வரை, ஆதார் அடையாள எண் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது.இந்நிலையில், ஆதார் விண்ணப்பிக்கவும், அதிலுள்ள தகவல்களை மாற்றம் செய்யவும் பலருக்... மேலும் பார்க்க