செய்திகள் :

மோகன்லாலின் தாயார் மறைவு: "நாங்கள் பேசுவோம், சிரிப்போம்!" - நினைவுகளைப் பகிரும் மோகன்லாலின் நண்பர்

post image

நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தாகுமாரி இயற்கை எய்தியிருக்கிறார். 90 வயதான இவர் வயது மூப்பு காரணமாக நேற்றைய தினம் கேரளா, கொச்சியிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார்.

மோகன்லாலின் தாயாரின் மறைவுக்கு மலையாள திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மோகன்லாலுக்கு நெருக்கமானவரும், இயக்குநருமான மேஜர் ரவி, மோகன்லாலின் தாயார் சாந்தா குறித்து மனோரமா ஊடகத்திடம் பேசியிருக்கிறார்.

Mohanlal with his mom
Mohanlal with his mom

அவர், "லாலின் அம்மா இறந்த செய்தியைக் கேட்டதும் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அழுதுகொண்டே மோகன்லாலைப் பார்க்கப் போனேன். அவரும் உடைந்து போயிருந்தார். அவரது கண்களில் ஆழமான துக்கம் தெரிந்தது.

ஆனால் அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு எல்லோரையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்.

அவர் உள்ளே மறைத்து வைத்திருக்கும் வலியை என்னால் பார்க்க முடிந்தது. நான் எப்போது போன் செய்தாலும் மோகன்லால் ‘அண்ணா, அம்மா படுத்த படுக்கையாக இருக்கிறார்’ என வருத்தத்துடன் சொல்வார்.

அதைக் கேட்கும்போதே அவருக்குள் ஏற்பட்ட வலி எனக்குப் புரியும். அம்மா போய்விட்டால் உண்மையிலேயே ஒருவன் தனிமையாகிவிடுகிறான் என்ற பயம் அவருக்குள் இருந்தது.

எத்தனை பேர் சுற்றிலும் இருந்தாலும், வேறு யாராலும் நிரப்ப முடியாத பாதுகாப்பின்மை உணர்வு தாயை இழந்த சமயத்தில் வரும். லால் இந்த வலியை வெளிக்காட்டவில்லை.

Major Ravi New Film - Mohanlal
Major Ravi New Film - Mohanlal

1994-ல் லாலை முதலில் சந்தித்தபோது அவர் என்னை முடவன்முகளில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்தார். அப்போது அவரது பெற்றோர் இருவரிடமும் நான் ஒரு ராணுவ வீரர் என அறிமுகப்படுத்தினார்.

அன்றிலிருந்து எங்கள் உறவு சினிமாவைத் தாண்டியதாக உருவெடுத்தது. லாலுக்கும் அவரது அம்மாவுக்கும் இடையிலான பாசத்தைப் பார்க்கும்போது, என் அம்மா உயிரோடு இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். நான் சாந்தாகுமாரியை அடிக்கடி போய்ப் பார்ப்பேன்.

சில சமயம் அவர் என்னைப் பார்த்து ‘எங்க போயிருந்த?’ என்று கேட்பது போலப் பார்ப்பார். பிறகு நாங்கள் பேசுவோம், தமாஷ் செய்வோம், சிரிப்போம்! நான் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் என்னை மிகுந்த அன்போடு வரவேற்றார்” எனக் கூறியிருக்கிறார்.

"அம்மா அதை நினைவூட்டியிருக்கிறார்!" - நடிகை ஊர்வசியின் மகள் தேஜலக்‌ஷ்மி

நடிகர் ஊர்வசியின் மகளான தேஜலக்‌ஷ்மி சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். மலையாளத்தில் 'சுந்தரியாயவள் ஸ்டெல்லா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஊர்வசியுடன் 'பாப்லோ பார்ட்டி' என்ற திரை... மேலும் பார்க்க

Parvathy Thiruvothu: "அந்த வலியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன்!" - நடிகை பார்வதி திருவோத்து

நடிகை பார்வதி திருவோத்து, அவருடைய குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அவர் சிறு வயதில் இருக்கும்போது தெரியாத நபர் ஒருவர் அவரைத் துன்புறுத்தியது கு... மேலும் பார்க்க

Sarvam Maya: "அப்பாவை அப்படி முத்திரை குத்துவது தவறானது!" - சத்யன் அந்திக்காடின் மகன் அகில் சத்யன்

மலையாள சினிமாவின் சீனியர் இயக்குநரான சத்யன் அந்திக்காடின் மகன் அகில் சத்யன் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கிறது 'சர்வம் மாயா' திரைப்படம். நிவின் பாலி நடித்திருக்கும் இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும்,... மேலும் பார்க்க

Sreenivasan: "'விஷம் சாப்பிடாமல் இருப்பதுதான் லாபம்' என்பார்!" - பகிர்கிறார் ஸ்ரீனிவாசனின் நண்பர்!

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக் குறைவால் கடந்த சனிக்கிழமை இயற்கை எய்தினார். 69 வயதானவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த சனிக்கிழமை திடீரென இவருக்கு மூச்சு... மேலும் பார்க்க

Anaswara Rajan: "அல்லு அர்ஜுனை மலையாள நடிகர் என நினைத்துக் கொண்டிருந்தேன்" - அனஸ்வரா ராஜன்

மலையாளம், தெலுங்கு, தமிழ் என அனைத்து பக்கங்களிலும் ஆல் ரவுண்டராக வலம் வருகிறார் நடிகை அனஸ்வரா ராஜன்.அவர் நடித்திருக்கும் 'சாம்பியன்' என்ற தெலுங்கு திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இதுதான்... மேலும் பார்க்க

Sreenivasan: "ஸ்ரீனி மூலமாக மக்கள் அதை திரையில் கண்டார்கள்!" - மோகன்லால் உருக்கம்!

mமலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் இன்று காலை இயற்கை எய்தினார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார். இவருக்கு வயது 69. நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்கு... மேலும் பார்க்க