செய்திகள் :

ம.பி: `பாலியல் வன்கொடுமை அதிகம் நடக்கக் காரணம்..' - MLA பேச்சால் சர்ச்சை; திக்விஜய் சிங் சொன்ன பதில்

post image

மத்தியப் பிரதேசத்திலிருந்து இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்படவர் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை ததியாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ``பாலியல் வன்கொடுமை பட்டியலினப் பெண்களுக்குதான் அதிகம் நடக்கிறது. அதற்கு காரணம், குறிப்பிட்ட சமூக பெண்களை வல்லுறவு செய்வதால், புனித யாத்திரை சென்றதற்கு சமமான புண்ணியம் கிடைப்பதாக மத நூல் ஒன்று கூறுகிறது.

யாத்திரை செல்ல முடியாத பட்சத்தில், புண்ணியத்தை சம்பாதிக்க குறிப்பிட்ட சில ஆண்கள் வல்லுறவு கொள்கிறார்கள். இதுபோன்ற மத நம்பிக்கைகள் வல்லுறவு கொள்ள தூண்டுகின்றன" என்றார்.

இந்த விவகாரம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா
எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா

மேலும், எம்.எல்.ஏ பூல் சிங் பரையா மீது ராகுல் காந்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திக்விஜய் சிங்-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், ``பூல் சிங் பரையா பேசியது தவறாக சித்தரிக்கப்படுகிறது. பூல் சிங் பரையா கூறியது பட்னா பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் முன்னாள் தலைவரும், பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவருமான ஹரி மோகன் ஜா எழுதிய ஒரு புத்தகத்திலிருந்துதான் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இந்தக் கருத்து நடவடிக்கை எடுக்கத் தகுந்த கருத்து என்றால், அதை எழுதியவர் மீதுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்?" என்றார்.

``இதற்குப் பிறகும் துணை முதல்வர் பதவியில் இருப்பதா?" - உதயநிதி ஸ்டாலினை சாடும் பாஜக

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 2023-ம் ஆண்டு சனாதான ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், `சனாதன தர்மம் சமத்துவம் மற்றும் சமூக நீதிக... மேலும் பார்க்க

`வைத்திலிங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்!' - திமுக தட்டி தூக்கிய பின்னணி

திமுகவில் வைத்தி!தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள் வர, இன்னும் ஒருசில வாரங்களே இருக்கின்றன. இந்த நிலையில், ஒவ்வொரு முன்னணி கட்சிகளும் தேர்தல் நேரத்தில் வலுசேர்க்க முக்கிய பிரமுகர்களை தங்கள் கட... மேலும் பார்க்க

Sasikala: ``திமுகவை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன்" - சசிகலா

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை பரபரப்பாக தொடங்கியிருக்கின்றன. பா.ஜ.க சார்பில் என்.டி... மேலும் பார்க்க

`ராகுல் காந்தி இல்லையென்றால் இந்தியாவை விற்றுவிடுவார்கள்!' – பாஜகவை சீண்டிய காங்கிரஸ் எம்.பி

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற... மேலும் பார்க்க

NDA கூட்டணி: "நாம் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்" - வாழ்த்திய இபிஎஸ்ஸுக்கு டிடிவி தினகரன் நன்றி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்ப... மேலும் பார்க்க

`மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?

வைத்திலிங்கம் திமுக-வில் இணையப்போவதாக பேசப்பட்டதை, அவரே உண்மையாக்கியிருக்கிறார். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னர் வைத்திலிங்கம் கார் அறிவாலயம் நோக்கி சென்றது. ``அதிமுக எடப்பாடி... மேலும் பார்க்க