செய்திகள் :

கோவையில் 80 அடி உயரத்தில் பழுதான ரோலர் கோஸ்டர்! - 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு

post image

கோவை கொடிசியா மைதானத்தில், தனியார் நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அங்கு செயற்கை நீருற்று  மற்றும் பல்வேறு விதமான ராட்டினங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோவை

பொருட்காட்சிக்கு தினசரி ஏராளமான மக்கள் சென்று வருகிறார்கள். நேற்று இரவு 10 மணி அளவில் ரோலர் கோஸ்டர் ராட்டினத்தில் 20-க்கும் மேற்பட்ட மக்கள் சென்றுள்ளனர்.

சுமார் 80 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ராட்டினம் பழுதாகி நின்றுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் பயத்தில் கதறி துடித்தனர். எவ்வளவு முயற்சித்தும் பழுது சரியாகவில்லை என்பதால் தீயணைப்பு  துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோவை பொருட்காட்சி

அதிநவீன இயந்திரங்கள், வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்கும் பணியில் இறங்கினார்கள். இதனால் அங்கு உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.

இரவுநேரம் என்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினரின் தீவிர முயற்சியால் மக்கள் நீண்ட நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர். ராட்டினத்தில் பயணம் செய்த 20 பேரும் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். கீழே வந்த பிறகு தான் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதுதொடர்பாக மக்கள் பொருட்காட்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஹீலியம் சிலிண்டர்கள் வெடிப்பது ஏன்? தொடர் விபத்துகளால் பலூன் வியாபாரிகளுக்குத் தடை விதிக்க கோரிக்கை

கடற்கரை, வணிக வீதிகள், சுற்றுலாத் தலங்கள், திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தவறாமல் இடம்பிடிப்பவை `ஹீலியம்' வாயுவால் நிரப்பப்பட்ட பலூன்கள். குழந்தைகள் மட்டுமல்ல பல நேரங்களில் பெரியவர்களும் ... மேலும் பார்க்க

ஸ்பெயின்: "விசித்திரமான விபத்து" - மோதிக்கொண்ட ரயில்கள்; 21 பேர் பலி; அரசு சொல்வது என்ன?

ஸ்பெயினில் நேற்று இரவு இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து தென் ஸ்பெயினில் உள்ள அடமுஸ் நகரத்திற்கு அருகே நடந்துள்ளது.மலகாவில் இருந்து மாட்ரிட்டிற்குச் சென்று கொண்டிருந்த அதி... மேலும் பார்க்க

ஊட்டி: கழிவறை இல்லாத கூலித் தொழிலாளர்கள் குடியிருப்பு; காட்டுமாடு முட்டி பெண் பலியான சோகம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கொதுமுடி படுகர் கிராமம். மலை காய்கறி, தேயிலை சாகுபடி அதிகம் நடைபெறும் இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித... மேலும் பார்க்க

MSC ELSA 3: கடலில் மூழ்கிய லைபீரியக் கப்பல்; சிறைப்பிடித்த கேரள அரசு; ரூ.1227 கோடி செலுத்தி மீட்பு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து, கொச்சி துறைமுகத்துக்குச் சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்குக் கப்பல் மே 24-ம் தேதி கொச்சியில் இருந்து 38 நாட்டிக... மேலும் பார்க்க

36 பயணிகளுடன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்; கவலைக்கிடமான நிலையில் ஒருவர் - ஊட்டியில் சோகம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டியிலிருந்து இன்று மதியம் தங்காடு கிராமத்தை நோக்கிப் பயணிகளுடன் இயக்கப்பட்ட தனியார் மினி பஸ் ஒன்று, மணலாடா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த வேளையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து,... மேலும் பார்க்க

ஊட்டி: பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் - 30 பேர் காயம்... கோர விபத்தின் காட்சிகள்!

பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிக... மேலும் பார்க்க