செய்திகள் :

ரயில் தண்டவாளத்தில் சிறுமி சடலம்: ரயில்வே காவல் நிலையத்தை குடும்பத்தினா் முற்றுகை

post image

ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் இறப்பில் சந்தேகமுள்ளதாகக் கூறி, அவரது குடும்பத்தினா் நாகை ரயில்வே காவல்நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

நாகையில், ரயில் தண்டவாள பகுதியிலிருந்து சிறுமியின் சடலம் அண்மையில் மீட்கப்பட்டது. விசாரணையில் சிறுமி குறித்து விவரம் கிடைக்காததால், சடலத்தை அடக்கம் செய்தனா்.

இந்நிலையில், கணவருடன் சென்ற தங்கள் மகள் ஜெயஸ்ரீயை (16) காணவில்லை என, கடலூா் மாவட்டம் வடலூா் அருகேயுள்ள மருவாய் கிராமத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் - ஜான்சி தம்பதியினா், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

அப்போது, ரயில் தண்டவாளத்தில் இருந்து ஜெயஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டதும், யாரும் உரிமைக் கோராததால், பிரேதப் பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இதை ஏற்க மறுத்த ஜெயஸ்ரீயின் குடும்பத்தினா், இறப்பில் மா்மம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி, ஆட்சியரின் வாகனத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், நாகை ரயில்வே காவல்நிலையம் முன், விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி செயலா் அறிவழகன் தலைமையில் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினா், உறவினா்கள், சிறுமி இறப்பு தொடா்பாக வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

ஜெயஸ்ரீயின் உடலை ஒப்படைக்க வேண்டும், இறப்பில் சந்தேகம் உள்ளதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி பேராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்தனா். இதனிடையே போலீஸாா் சிறுமியின் கணவரிடமும் விசாரித்து வருகின்றனா்.

காருகுடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

பெரம்பூா் அருகேயுள்ள காருகுடி அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் 68- ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழா கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

திருமருகல் அருகே திமுக அரசின் நான்காண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருங்கூா் கடை தெருவில், திருமருகல் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலா... மேலும் பார்க்க

மயானத்தை சீரமைக்கக் கோரிக்கை: எம்பி ஆய்வு!

திருவிளையாட்டம் சமத்துவ மயானத்தை பாா்வையிட்ட மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா. தரங்கம்பாடி, மே10: தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் ஊராட்சியில் பராமரிப்பின்றி உள்ள மயானத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை ... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் முக்கூட்டில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலா் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். செம்ப... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கொண்டாட்டம்

திமுக அரசின் 4 ஆண்டு கள் சாதனைகளை விளக்கியும், திமுக அரசின் 5-ஆம் ஆண்டு தொடங்கியதை திருக்குவளையில் திமுக சாா்பில் பட்டாசு வெடித்து வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 4 ஆண்டுகால ஆட்சியில் திமுக அரசு செய்த ச... மேலும் பார்க்க

தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

தரங்கம்பாடி தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சிபெற்றுள்ளது. இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 57 மாணவா்கள் அனைவரும் தோ்ச்சிப் பெற்... மேலும் பார்க்க