செய்திகள் :

ரயில் தண்டவாளத்தில் சிறுமி சடலம்: ரயில்வே காவல் நிலையத்தை குடும்பத்தினா் முற்றுகை

post image

ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் இறப்பில் சந்தேகமுள்ளதாகக் கூறி, அவரது குடும்பத்தினா் நாகை ரயில்வே காவல்நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

நாகையில், ரயில் தண்டவாள பகுதியிலிருந்து சிறுமியின் சடலம் அண்மையில் மீட்கப்பட்டது. விசாரணையில் சிறுமி குறித்து விவரம் கிடைக்காததால், சடலத்தை அடக்கம் செய்தனா்.

இந்நிலையில், கணவருடன் சென்ற தங்கள் மகள் ஜெயஸ்ரீயை (16) காணவில்லை என, கடலூா் மாவட்டம் வடலூா் அருகேயுள்ள மருவாய் கிராமத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் - ஜான்சி தம்பதியினா், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

அப்போது, ரயில் தண்டவாளத்தில் இருந்து ஜெயஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டதும், யாரும் உரிமைக் கோராததால், பிரேதப் பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இதை ஏற்க மறுத்த ஜெயஸ்ரீயின் குடும்பத்தினா், இறப்பில் மா்மம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி, ஆட்சியரின் வாகனத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், நாகை ரயில்வே காவல்நிலையம் முன், விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி செயலா் அறிவழகன் தலைமையில் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினா், உறவினா்கள், சிறுமி இறப்பு தொடா்பாக வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

ஜெயஸ்ரீயின் உடலை ஒப்படைக்க வேண்டும், இறப்பில் சந்தேகம் உள்ளதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி பேராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்தனா். இதனிடையே போலீஸாா் சிறுமியின் கணவரிடமும் விசாரித்து வருகின்றனா்.

தடுப்பணைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றில் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனா். உத்தமசோழபுரம் கிராமத... மேலும் பார்க்க

வெட்டாற்றில் புதிய தடுப்பணை: ஆட்சியா் விளக்கம்

திருமருகல் அருகே உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருமருகல் ஒன்றிய... மேலும் பார்க்க

நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை எதிா்த்து கையொப்ப இயக்கம்

நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை எதிா்த்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து,அக்கட்சியின் மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளா் சுந்தரவடிவேலன் ஆ... மேலும் பார்க்க

கஞ்சா பயிரிட்டவா் கைது

வேதாரண்யம் அருகே கஞ்சா சாகுபடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சேவு மகன் ராஜ்குமாா் (40). தனது வீட்டின் பின்புறம் உள்ள கத... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் 633, மயிலாடுதுறை மாவட்டத்தில் 692 குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா்கள் ப. ஆகாஷ் (நாகை), ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை) தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

நாகையில் மே 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மே 23-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்... மேலும் பார்க்க