செய்திகள் :

'ரயில் நிலையத்திற்குச் சென்று தட்கல் டிக்கெட் எடுப்பவரா நீங்க?' - இனி ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் நடைமுறை

post image

வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்குப் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

என்ன நடைமுறை?

இனி பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் டிக்கெட் புக் செய்ய நீண்ட நேரத்திற்குக் காத்திருக்க தேவையில்லை. வருகிற 1-ம் தேதி முதல், டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதன் படி, ஏ.சி தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கான டோக்கன் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை வழங்கப்படும். ஏ.சி அல்லாத தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கான டோக்கன் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை வழங்கப்படும்.

ரயில்
ரயில்

இந்த நேரத்தில் வந்த தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கான டோக்கனைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த டோக்கனைப் பெற்றவர்கள் தட்கல் டிக்கெட் புக்கிங் நேரத்தில் வரிசையில் நிற்காமல் நேரடியாக டிக்கெட் புக்கிங்கிற்கு வரலாம்.

10, 15 டோக்கன்கள்

ஆரம்பத்தில், ஒவ்வொரு முன்பதிவு மையத்திலும் ஏ.சி தட்கலுக்கு 10 டோக்கன்களும், ஏ.சி அல்லாத தட்கலுக்கு 15 டோக்கன்களும் வழங்கப்பட உள்ளது.

இதன் பின், பயணிகளின் தேவை மற்றும் ரயில் நிலையத்தின் உள்ளூர் தேவையைப் பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும்.

டோக்கன் பெற்றவர்களுக்கு தட்கல் டிக்கெட் புக் செய்த பிறகும் டிக்கெட்டுகள் இருந்தால், வரிசையில் முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட் புக் செய்யப்படும்.

A மற்றும் B வகைகள்

இந்த டோக்கன் அடிப்படையிலான தட்கல் டிக்கெட் புக்கிங்கிலேயே இரண்டு வகைகள் உண்டு - A மற்றும் B.

ரயில்
ரயில்

A வகை குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ஒதுக்கப்படும். இதில் தங்களது புகைப்பட அடையாள அட்டையும், குடும்ப உறுப்பினரின் அடையாள அட்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.

B வகையில் தனிநபர்கள், குடும்பம் அல்லாத குழுக்கள், பொதுப் பணிகள் ஆகியவற்றுக்கு டோக்கன் வழங்கப்படும்.

டோக்கன் பெற்ற பிறகு இந்த வகைகளை மாற்ற முடியாது.

ஆன்லைன் தட்கல் டிக்கெட் புக்கிங்கில் எந்தவித மாற்றமும் இல்லை.

கர்நாடக வனத்துறை தூப்பாக்கிச் சூடு: "காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!" - மு.க. ஸ்டாலின்

கர்நாடக மாநிலம், சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில், காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது. நேற்று அதிகாலை 5 மணியளவில் தோமையார்பாளையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கர்ந... மேலும் பார்க்க

ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை அறிதல்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

அரசு தொடக்க, நடுநிலை, அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையை அறிய பள்ளிக் கல்வித்துறையிலிருந்து உத்தரவிடப்பட்ட... மேலும் பார்க்க

`அதுக்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காம... இதுக்கு கைது பண்ணிட்டாங்க!' - உதயநிதி ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தான் கைது செய்யப்பட்டபோது நடந்தது குறித்தும், தவெக அரசை விம... மேலும் பார்க்க

சேலம்: 80 வது சுதந்திர தின விழாவின் கோலாகலமான கொண்டாட்டம்! | Photo Album

சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட... மேலும் பார்க்க

திருநெல்வேலியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழா புகைப்படத்தொகுப்பு! | Photo Album

திருநெல்வேலியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழா புகைப்படத்தொகுப்பு.!விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு; "தாயை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது" - சீறும் அண்ணாமலை மேலும் பார்க்க

திருப்பூர்: 80 வது சுதந்திர தின விழா கோலாகலக் கொண்டாட்டம்! | Photo Album

திருப்பூரில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்திருப்பூரில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்திருப்பூரில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்திருப்பூரில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்திருப்பூரில் சுதந்திரதின விழா கொண்டா... மேலும் பார்க்க