செய்திகள் :

'ரயில் நிலையத்திற்குச் சென்று தட்கல் டிக்கெட் எடுப்பவரா நீங்க?' - இனி ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் நடைமுறை

post image

வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்குப் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

என்ன நடைமுறை?

இனி பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் டிக்கெட் புக் செய்ய நீண்ட நேரத்திற்குக் காத்திருக்க தேவையில்லை. வருகிற 1-ம் தேதி முதல், டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதன் படி, ஏ.சி தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கான டோக்கன் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை வழங்கப்படும். ஏ.சி அல்லாத தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கான டோக்கன் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை வழங்கப்படும்.

ரயில்
ரயில்

இந்த நேரத்தில் வந்த தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கான டோக்கனைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த டோக்கனைப் பெற்றவர்கள் தட்கல் டிக்கெட் புக்கிங் நேரத்தில் வரிசையில் நிற்காமல் நேரடியாக டிக்கெட் புக்கிங்கிற்கு வரலாம்.

10, 15 டோக்கன்கள்

ஆரம்பத்தில், ஒவ்வொரு முன்பதிவு மையத்திலும் ஏ.சி தட்கலுக்கு 10 டோக்கன்களும், ஏ.சி அல்லாத தட்கலுக்கு 15 டோக்கன்களும் வழங்கப்பட உள்ளது.

இதன் பின், பயணிகளின் தேவை மற்றும் ரயில் நிலையத்தின் உள்ளூர் தேவையைப் பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும்.

டோக்கன் பெற்றவர்களுக்கு தட்கல் டிக்கெட் புக் செய்த பிறகும் டிக்கெட்டுகள் இருந்தால், வரிசையில் முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட் புக் செய்யப்படும்.

A மற்றும் B வகைகள்

இந்த டோக்கன் அடிப்படையிலான தட்கல் டிக்கெட் புக்கிங்கிலேயே இரண்டு வகைகள் உண்டு - A மற்றும் B.

ரயில்
ரயில்

A வகை குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ஒதுக்கப்படும். இதில் தங்களது புகைப்பட அடையாள அட்டையும், குடும்ப உறுப்பினரின் அடையாள அட்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.

B வகையில் தனிநபர்கள், குடும்பம் அல்லாத குழுக்கள், பொதுப் பணிகள் ஆகியவற்றுக்கு டோக்கன் வழங்கப்படும்.

டோக்கன் பெற்ற பிறகு இந்த வகைகளை மாற்ற முடியாது.

ஆன்லைன் தட்கல் டிக்கெட் புக்கிங்கில் எந்தவித மாற்றமும் இல்லை.

`முதல்வர் விஜய் குறித்து பேசினால் நடவடிக்கை; அதே சீமான் பற்றி பேசினால் இல்லையா?' - நீதிமன்றம் கேள்வி

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அதில், `நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் மு.... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி ரத்து! - நீதிமன்றம் கூறியதென்ன?

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிஉயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர... மேலும் பார்க்க

தருமபுரி: கொரில்லா வேடமிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு; போலீஸாரின் நூதனப் பிரசாரம் | Photo Album

தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழ... மேலும் பார்க்க

CJP Protest: கோரிக்கைகளை ஏற்பதாக அரசு உறுதி! - போராட்டத்தை வாபஸ் பெற்ற காக்ரோச் ஜனதா கட்சி

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தைக் காக்ரோச் ஜனதா கட்சி வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. Dharmend... மேலும் பார்க்க

"இந்த அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!'' - தர்மேந்திர பிரதான் ராஜினாமா பற்றி ராகுல் காந்தி

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ... மேலும் பார்க்க

'கரப்பான்பூச்சிகளுடன் மோதாதீர்கள்; நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!' - ராஜினாமா பற்றி அபிஜித் தீப்கே

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ... மேலும் பார்க்க