செய்திகள் :

ராஜஸ்தான்: திருட வந்த இடத்தில் எக்ஸாஸ் பேன் துளையில் சிக்கிக் கொண்ட நபர்; மீட்டுக் கைதுசெய்த போலீஸ்!

post image

ராஜஸ்தான் மாநிலம், கோடா என்ற இடத்தில் வசிப்பவர் சுபாஷ் குமார். இவர் சம்பவத்தன்று வெளியில் சென்று இருந்தார். அவரின் மனைவியும் வெளியில் சென்றுவிட்டு அதிகாலை ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வெளியில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. சுஷாஷ் குமார் மனைவி வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றபோது, சமையல் அறையில் திருடன் ஒருவன் மாட்டி இருந்தான். சமையல் அறையில் எக்ஸாஸ் பேன் மாட்டுவதற்காக துளை ஒன்று போடப்பட்டு இருந்தது.

அந்த துளையில் திருடன் ஒருவன் பாதி உடல் வீட்டிற்குள் வந்த நிலையில் வெளியேயும் செல்ல முடியாமல் உள்ளேயும் செல்ல முடியாமல் திரைப்படத்தில் வருவது போன்று அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான். உடனே சுபாஷ் குமார் மனைவி பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அத்திருடனை துளையில் இருந்து பத்திரமாக மீட்டு, கைதுசெய்தனர்.

பிடிபட்ட திருடனுடன் வேறு ஒரு நபரும் வந்துள்ளார். இந்த திருடன் துளையில் சிக்கிக் கொண்டதால் அவரை மீட்க தப்பியோடிய நபர் முயற்சி செய்துள்ளார். ஆனால் மீட்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். திருடர்கள் இரண்டு பேரும் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்துள்ளனர்.

காரை வெளியில் நிறுத்திவிட்டு மெயின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுள்ளனர். உள்ளே இருந்த வீட்டுக் கதவை திறந்த முடியாத காரணத்தால் சமையல் அறை வழியாக வீட்டிற்குள் செல்ல முடிவு செய்து, ஒரு திருடனை மற்றொரு திருடன் மேலே ஏற்றிவிட்டு இருக்கிறான் என்பது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. தப்பியோடிய திருடனை போலீஸார் தேடி வருகின்றனர். திருடன் எக்ஸாஸ் பேன் துளையில் சிக்கிக்கொண்டு திண்டாடும் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அ... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு - கார் வாங்குவது போல் வரவழைத்து வியாபரி கொலை செய்யபட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த ... மேலும் பார்க்க

மும்பை தேர்தலில் மிரட்டல், படுகொலை: சேனா வேட்பாளருக்கு கத்திக்குத்து, எதிர்க்கட்சி நிர்வாகி படுகொலை!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணி, சிவசேனா(உத்தவ்) கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் ... மேலும் பார்க்க

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ... மேலும் பார்க்க