செய்திகள் :

ராமேஸ்வரம்: காணிக்கைப் பணத்தில் கைவைத்த சிவபக்தை; கோயிலில் தொடரும் உண்டியல் திருட்டு

post image

காசிக்கு நிகரான புனித தலமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் வந்து செல்கின்றனர்.

விழா காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரிக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின் கோயிலுக்குள் உள்ள உண்டியல்களில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த பட்டாடைகள் போன்றவற்றை காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம்

.

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்

இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம்தோறும் எண்ணப்படும். இந்த எண்ணிக்கை பணியில் கோயில் ஊழியர்கள் தவிர ஆன்மிகக் குழுக்களைச் சேர்ந்த பக்தர்கள், பள்ளி மாணவிகள் எனப் பலரும் ஈடுபடுவர்.

கடந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு நேற்று நடந்தது. கோயில் அதிகாரிகள் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்தப் பணியில் திருச்சி துறையூர் கைலாச நாதர், சிவகாமசுந்தரி ஆன்மிக அன்பர் குழுவைச் சேர்ந்த 118 பேர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இந்தக் குழுவைச் சேர்ந்த துறையூர் ஆளத்துடையான் பட்டியைச் சேர்ந்த பிரபாவதி என்பவர் காணிக்கைப் பணத்தைத் திருடி தனது ஆடைக்குள் மறைத்து வைத்தது கோயில் அதிகாரியின் அறையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் மூலம் தெரியவந்தது.

இதனைக் கண்ட அதிகாரிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பிரபாவதியைச் சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் அவர் மறைத்து வைத்திருந்த கோயில் காணிக்கைப் பணம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 670 ரூபாய் சிக்கியது.

திருட்டில் ஈடுபட்ட பிரபாவதி
திருட்டில் ஈடுபட்ட பிரபாவதி

அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் கடந்த 6 மாதங்களாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின்போது காணிக்கைப் பணத்தைத் திருடிய மணிகண்டன் என்பவர் சிக்கினார். கோயில் தூய்மை பணியாளரான இவர் பல முறை இது போன்று காணிக்கை திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மணிகண்டன் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் கோயில் காணிக்கை எண்ணும் பணிக்கு வந்திருந்த ஆன்மீக குழுவைச் சேர்ந்த சிவபக்தையே சிவனது காணிக்கைப் பணத்தினைக் களவாடிய சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா: தேர்தலில் போட்டியிட தடையாக இருந்த 6 வயது மகளை கொன்ற கொடூர தந்தை - என்ன நடந்தது?

மகாராஷ்டிராவில் வரும் 5-ம் தேதி பஞ்சாயத்து மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட வேண்டியிட விரும்புபவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்... மேலும் பார்க்க

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - இறப்பதற்கு முன்பு செய்த `செயல்!'

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேடு, தம்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் (48). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த... மேலும் பார்க்க

நெல்லை: திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட நிலையில் மணப்பெண் உயிரிழப்பு; ஆணவக்கொலையா?- நடந்தது என்ன?

நெல்லை, பேட்டை செக்கடி தெருவைச் சேர்ந்தவர் பச்சிராஜன். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, ரேவதி. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது முதல் மகளுக்கு திருமணமான... மேலும் பார்க்க

UP: 9 ஆண்டு காதல்; 2 மாதத் திருமண வாழ்க்கை; கழுத்தை நெரித்து கணவன் கொலை; மனைவி சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேசத்தில் 9 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த காதல் கணவனை மனைவி இரண்டு மாதத்தில் கொலை செய்துள்ளார்.அங்குள்ள பரேலி என்ற இடத்தில் வசிப்பவர் ஜோதி. இவர் அரசு பஸ்சில் ஒப்பந்த அடிப்படையில் நடத்துந... மேலும் பார்க்க

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: சென்னையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை; சாட்சியாக மாற்ற முடிவா?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

கடலூர்: காதலில் விழுந்த மருமகள்; கண்டித்த மாமனாரை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்

கடலூர் மாவட்டம் மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயியான ராஜேந்திரன், கடந்த 29-ம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.... மேலும் பார்க்க