செய்திகள் :

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - இறப்பதற்கு முன்பு செய்த `செயல்!'

post image

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேடு, தம்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் (48). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணமானது.

தற்கொலை செய்த குடும்பத்தினர்

இலக்கிய செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு எக்ஷிதா ஏஞ்சல் என்கிற பெண் குழந்தை இருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர்களது வீட்டில் 3 பேரும் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

அருகில் உள்ள பொது மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்
புற்றுநோய்

முதல் கட்ட விசாரணையில் இலக்கியா கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக சிகிச்சை எடுத்தும் குணமாகாத வருத்தத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளனர்.

இறப்பதற்கு முன்பு கமலேஷ் பதிவு செய்த வீடியோவில், “என் மனைவி மார்பக புற்றுநோயால் நோயால் பாதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமடைந்ததால் எங்களுக்கு என்ன செய்தென்று தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்கிறோம். நாங்கள் இறந்த பிறகு எங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கமலேஷ்

இதற்கான செலவுத் தொகையான ரூ.50,000 ஏற்கனவே ஆலயத்திற்கு அனுப்பிவிட்டோம். என்னுடைய சேமிப்புப் பணத்தையும் ஆலயத்திற்கு எழுதிவிட்டேன். பணியில் இறந்ததால் கிடைக்கும் பணத்தை தமிழ்நாடு ஏழை மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

நெல்லை: திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட நிலையில் மணப்பெண் உயிரிழப்பு; ஆணவக்கொலையா?- நடந்தது என்ன?

நெல்லை, பேட்டை செக்கடி தெருவைச் சேர்ந்தவர் பச்சிராஜன். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, ரேவதி. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது முதல் மகளுக்கு திருமணமான... மேலும் பார்க்க

UP: 9 ஆண்டு காதல்; 2 மாதத் திருமண வாழ்க்கை; கழுத்தை நெரித்து கணவன் கொலை; மனைவி சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேசத்தில் 9 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த காதல் கணவனை மனைவி இரண்டு மாதத்தில் கொலை செய்துள்ளார்.அங்குள்ள பரேலி என்ற இடத்தில் வசிப்பவர் ஜோதி. இவர் அரசு பஸ்சில் ஒப்பந்த அடிப்படையில் நடத்துந... மேலும் பார்க்க

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: சென்னையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை; சாட்சியாக மாற்ற முடிவா?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

கடலூர்: காதலில் விழுந்த மருமகள்; கண்டித்த மாமனாரை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்

கடலூர் மாவட்டம் மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயியான ராஜேந்திரன், கடந்த 29-ம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.... மேலும் பார்க்க

ஐடி சோதனையின் போது விபரீதம்: விசாரணையின்போதே தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் சிஜே ராய்!

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான 'கான்ஃபிடன்ட் குழுமத்தின்' (Confident Group) நிறுவனர் மற்றும் தலைவர் சி.ஜே. ராய் (57). கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இவர், ரியல் எஸ்டேட் துறையில் மிக... மேலும் பார்க்க

குளித்தலை: `ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; யாருக்காக ஆட்சி நடத்துகிறது திமுக?' - அண்ணாமலை கண்டனம்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனியாண்டி. இவருக்குச் சொந்தமான கல்குவாரி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிவாயம் பகுதியில் செயல்பட்டு ... மேலும் பார்க்க