செய்திகள் :

ரிஷப் பந்த் தனித்துவமான வீரர்; முன்னாள் விக்கெட் கீப்பர் புகழாரம்!

post image

ரிஷப் பந்த் மிகவும் தனித்துவமான வீரர் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இதையும் படிக்க: ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளைத் தவறவிடும் பும்ரா! மும்பை அணிக்கு பின்னடைவா?

விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த சீசன் வரை தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த், ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தனித்துவமான வீரர்

விரைவில் ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், ரிஷப் பந்த் மிகவும் தனித்துவமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: புலிகளின் புலி: தில்லி கேப்டனாக அக்‌ஷர் படேல்!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் மிகவும் தனித்துவமான வீரர். அவர் பேட்டிங் செய்து ரன்கள் சேர்க்கும் மிகவும் தனித்துவமாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஷ் இங்கிலிஷும் சிறந்த வீரர். அவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடினார். தற்போது பல இளம் விக்கெட் கீப்பர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான தினேஷ் ராம்தின் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்!

பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி குவாஹாட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. ம... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடரும்! -பிசிசிஐ

நிகழாண்டுக்கான ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடருமா? என அனைவர் மத்தியிலும் கேள்வியெழுந்துள்ளது. 18-வது ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடரின் தொடக்கப் போட... மேலும் பார்க்க

மிரட்டிய டிராவிஸ் ஹெட்: விராட் கோலி அளித்த பரிசால் சதமடித்த நிதீஷ் ரெட்டி!

இந்தியாவின் ஆல்-ரவுண்டர் நிதீஷ் ரெட்டி பூமா பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் விராட் கோலி தனக்கு அளித்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால... மேலும் பார்க்க

ஐபிஎல்லின் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி! புதிய விதிகள் என்ன?

ஐபிஎல்லில் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.18-வது ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடரில் தொடக்கப் போட்டியில் கொல்கத்தா மற்றும்... மேலும் பார்க்க

2025 ஐபிஎல் கோப்பையை பஞ்சாப் அணி வெல்லும்.! -ஸ்ரேயாஸ் ஐயர்

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி கோப்பை வெல்லும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவ... மேலும் பார்க்க

முதல் போட்டியைத் தவறவிடும் ஹார்திக்... மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்!

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இந்திய டி20 கிரிக்கெட் அணியின் க... மேலும் பார்க்க