செய்திகள் :

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; மீட்புப் பணிகள் தீவிரம்; கேரளாவில் மீண்டும் சோகம்

post image

கேரள மாநிலத்தின் மலப்புறம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் 'ஆனக்கம்பொயில் - மேப்பாடி' சுரங்கப்பாதை திட்டப் பணிகள் தற்போது மேனகாட்சி பாலம் அருகே நடைபெற்று வருகின்றன.

மலப்புறம் மற்றும் வயநாடு இடையேயான போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தச் சுரங்கப்பாதை திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில், பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இன்று காலை திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் பல தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட உடனே, கல்பற்றாவில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவை இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுரங்கப்பாதைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்புகள் இருந்தன. மேலும், அப்பகுதியில் சில வீடுகளும், தங்கும் விடுதிகளும் (Homestays) அமைந்துள்ளன.

விபத்து நடந்தவுடன் உள்ளூர் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு, இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பேரைப் பத்திரமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்துள்ள அமைச்சர் டி. சித்திக் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு, மேலும் யாராவது இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனரா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக, கடந்த 2024 ஜூலை மாதத்தில் வயநாட்டின் மேப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் சூரல்மலா, முண்டக்கை போன்ற கிராமங்கள் முற்றிலும் அழிந்தன. 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அந்தப் பேரழிவின் வடு மாறுவதற்குள், தற்போது மீண்டும் அதே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிக்கிம் சுரங்கப்பாதை நிலச்சரிவு: சுரங்கத்தில் சிக்கிய 25 பேர்; 10 பேர் பலி? - தலைவர்கள் இரங்கல்

சிக்கிம் மாநிலத்தின் நாமச்சி மாவட்டத்தில் உள்ள சமர்துங் பகுதியில், 'என்ஹெச்பிசி டீஸ்டா கட்டம் VI' நீர்மின் திட்டத்திற்காக 'ADIT-3' என்ற சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நிலச்ச... மேலும் பார்க்க

கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து; தீக்கிரையான வீடுகள்; நடந்தது என்ன?

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் உள்ளன. இதில் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் நாகராஜ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பேர் பலி; திறந்திருந்த லெவல் கிராஸிங்தான் காரணமா?

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் இன்று காலை பயணிகள் ரயில் ஒன்று பள்ளி வேன் மீது மோதியதில், இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இதில் 5 மாணவர்களும் காயமடைந்தனர். முர்ஷிதாபாத்தின் பெர்ஹ... மேலும் பார்க்க

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”அழுகை சத்தம் இப்போதும் மறையவில்லை” - நினைவு தினத்தில் கலங்கிய பெற்றோர்

கும்பகோணம் ஶ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீக்கு இரையாகினர். பல குழந்தைகள் கடும் தீகாயங்களுடன் மீட்கப்பட... மேலும் பார்க்க

மதுரை: ஆம்னி பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐந்து பேர் பலியான சோகம்

சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென தனது கட்டுப்பாட்டு இழந்து நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிர்திசையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பே... மேலும் பார்க்க

பேங்காக் பாரில் பயங்கர தீவிபத்து: 27 பேர் உடல் கருகி பலி; 60 பேர் காயம்; எப்படி நடந்தது?

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் சத்துசக் மாவட்டத்தில் அமைந்துள்ளது Rong Beer Na Lat Phrao என்ற பிரபல உணவகம் மற்றும் பொழுதுபோக்கு விடுதி. நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வார இறுதி நாளைக் கொண்டாட... மேலும் பார்க்க