செய்திகள் :

வருங்கால கணவருடன் திருமண ஏற்பாடு; காதலனுடன் ரகசியக் கல்யாணம் - சியா கோயலின் இரட்டை வாழ்க்கை ?

post image

புனேவைச் சேர்ந்த இளம் ரியல் எஸ்டேட் அதிபர் கேத்தன் அகர்வால் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சியா கோயல், தனது வருங்கால கணவரான கேத்தனை கொலை செய்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, தனது காதலர் சேத்தன் சௌத்ரியை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல் தற்போது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த புதிய திருப்பம், இவ்வழக்கின் போக்கையே மாற்றியுள்ளது.

போலீஸ தரப்பு தகவலின்படி, சியா கோயலுக்கும் கேத்தன் அகர்வாலுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், சியாவும் அவரது காதலர் சேத்தனும் தங்களது திருமணத்தை ரகசியமாக முடித்துள்ளனர். இரு குடும்பத்தினருக்கும் தெரியாமல் இந்தத் திருமணத்தை மறைத்து, அதே சமயம் கேத்தனுடனான திருமண ஏற்பாடுகளையும் சியா தொடர்ந்து கவனித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேத்தன் அகர்வால் | சியா கோயல்
கேத்தன் அகர்வால் | சியா கோயல்

கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாக குற்றவாளிகளின் டிஜிட்டல் தடயங்களை போலீசார் ஆய்வு செய்தபோது இந்த ரகசியத் திருமணம் குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்களின் வாட்ஸ்அப் உரையாடல்கள், அழைப்பு பதிவுகள், இருப்பிடத் தரவுகள் (location data) மற்றும் இணைய தேடல் வரலாறு ஆகியவற்றை ஆய்வு செய்ததில் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது.

இந்த ரகசியத் திருமணத்தை ஆவணப்பூர்வமாக நிரூபிக்க, தம்பதியரின் திருமணச் சான்றிதழைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தத் திருமணத்திற்கு சியா கோயலின் கல்லூரி நண்பர்கள் இருவர் சாட்சிக் கையெழுத்திட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சியாவும் சேத்தனும் திருமண மாலைகளுடன் இருந்ததாகக் கூறப்படும் புகைப்படங்கள், ஒரு பிரைவேட் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் புகைப்படங்களை மீட்கும் பணியில் தொழில்நுட்பக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் திருமணத்தை இரு குடும்பத்தினரிடமிருந்தும் மறைத்த தம்பதியினர், பின்னர் கேத்தனை திட்டமிட்டு தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். முன்னதாக, ஜூன் 18 அன்று லோனாவாலா அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லோகாகாட் கோட்டையிலிருந்து கேத்தன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ஜூன் 14 அன்று கேத்தனைக் கொலை செய்ய முதல் முயற்சி நடந்ததாகவும், ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகவும் போலீசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கில் சியா கோயல் மற்றும் சேத்தன் சௌத்ரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த இரட்டை வாழ்க்கை மற்றும் ரகசியத் திருமணம் குறித்த கோணத்தில் தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.!

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க