செய்திகள் :

வருமான வரித் துறை அலுவலகத்தில் பொங்கல் விழா: நடிகா் வடிவேலு பங்கேற்பு

post image

மதுரை வருமான வரித் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் நடிகா் வடிவேலு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

மதுரை பீ.பீ. குளத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் மனமகிழ் மன்றம் சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு வருமான வரித் துறை தலைமை ஆணையா் சஞ்சய்ராய் தலைமை வகித்தாா். முதன்மை ஆணையா் டி.வசந்தன், கூடுதல் ஆணையா் எஸ். சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திரைப்பட நடிகா் வடிவேலு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். இதில் பொங்கல் வைக்கப்பட்டு, வருமான வரித் துறை ஆண், பெண் ஊழியா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், கிராமிய நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பறை இசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு நடிகா் வடிவேலு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி! கட்சிகளுக்கு தடை!

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு மற்றும் அதன் ஆதரவு அமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா்களுக்கு இன்று ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளா் துறை அறிவுறுத்தல்

மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு புதன்கிழமை (பிப்.5) ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா்கள் அறிவுறுத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து முதுநிலை பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உள்ள கல்வேலிப்பட்டி விஐபி நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அக்ஷய்குமாா... மேலும் பார்க்க

அவரச ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

உசிலம்பட்டி அருகே அவசர ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜீவ்காந்தி (30). தனியாா் அவ... மேலும் பார்க்க

வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருள்கள் சேதம்

அலங்காநல்லூா் அருகே வீடு தீப்பற்றி எரிந்ததில் ரூ.5 லட்சம் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகேயுள்ள தண்டலை கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் மனைவி முத்துசெல்வி (34). இவா் தனது உறவி... மேலும் பார்க்க

அனுப்பானடி - ஜெ.ஜெ. நகா் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை

மதுரை அனுப்பானடியிலிருந்து கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதிக்கு மாலை நேர பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மதுரை கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி ம... மேலும் பார்க்க