செய்திகள் :

வாடகைக்கு பதிலாக மனைவி, 13 வயது மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தந்தை; குஜராத்தில் அதிர்ச்சி

post image

குஜராத் மாநிலம் மொர்பி என்ற இடத்தில் வசித்து வந்தவர் நரேந்திரா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 45 வயதாகும் நரேந்திரா தனது மனைவி, மகளுடன் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார்.

வீட்டிற்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் நரேந்திராவின் தொழில் சரியாக அமையவில்லை. இதனால் அவரால் சரியாக வாடகை கொடுக்க முடியவில்லை.

ஒவ்வொரு மாதமும் வாடகை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் வீட்டின் உரிமையாளர் தொடர்ந்து வாடகையைக் கொடுக்கும்படி நிர்ப்பந்தம் செய்து வந்தார்.

கைது
கைது

ஒரு கட்டத்தில் வாடகைக்குப் பதில் தனது மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்ய வீட்டு உரிமையாளரை நரேந்திரா அனுமதித்தார். வீட்டு உரிமையாளர் நரேந்திராவின் மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரின் 13 வயது மகளையும் பாலியல் வன்கொடுமை செய்தார்.

வீட்டு உரிமையாளர் மட்டுமல்லாமல் அவர் தனது உறவினர் ஒருவரையும் தன்னுடன் நரேந்திராவின் வீட்டிற்கு அழைத்து வந்தார். ஒரே நேரத்தில் நரேந்திராவின் மகளை வீட்டு உரிமையாளரும், நரேந்திராவின் மனைவியை வீட்டு உரிமையாளரின் உறவினரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இது குறித்து நரேந்திராவின் மனைவி தனது தாயாரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நரேந்திராவின் மாமியார் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் நரேந்திராவையும், வீட்டு உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

வீட்டு உரிமையாளரின் உறவினர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். கணவனே தனது மனைவி மற்றும் 13 வயதேயான மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பை: கணவன் துணையோடு காதலன் கொலை; டிரம்மில் அடைத்து சாக்கடையில் வீசிய பெண் சிக்கியது எப்படி?

டிரம் கொலைகள் பற்றி உத்தரப் பிரதேசத்தில் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மும்பையில் தற்போது அது போன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள மும்ப்ரா என்ற இடத்தில் வசித்தவர் அர்பாஸ் அலிகா... மேலும் பார்க்க

திருவாரூர்: தலைக்கேறிய கஞ்சா போதை; தாத்தா பாட்டியை கொன்று தீ வைத்த பேரன்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் வடுவூர் காரக்கோட்டை புதுத்தெருவில் முத்து(73)-சந்திரா(70) தம்பதியினர் வசித்து வந்தனர்.இவர்களுக்கு கலியபெருமாள் என்ற மகனும், அய்யப்பன்(30) என்ற பேரனும் உள்ளனர்.க... மேலும் பார்க்க

நெல்லை: மதுபோதையில் தகராறு; நண்பரைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பொதிகையடியைச் சேர்ந்தவர் வனராஜ். இவர், கடந்த 12-ம் தேதி பாபநாசம், லோயர் கேம்ப் வனப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வருவதாகக்கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீ... மேலும் பார்க்க

நீட் தேர்வு வினாத்தாள் கசிய காரணமான புனே பேராசிரியர் கைது; சிக்கியது எப்படி? வெளியான பகீர் பின்னணி

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இம்மாத தொடக்கத்தில் நடந்தது. ஆனால் இத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தேர்வுக்கான வினாத்தாள் மாணவர்களிடையே கசிந்தது. இது தேர்வு நடந்து முடிந்த பிறகுதான் வ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ; தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய பள்ளி மாணவர்கள் கைது

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ எடுத்து, அம்மாணவியின் தந்தையிடம் ரூ. 10 லட்சம் கேட்ட 3 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை... அம்பத்தூரில் பயங்கரம்!

சென்னை அம்பத்தூர், சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). இவரின் கணவர் தாமோதரன். சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதியினருக்கு 6 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும... மேலும் பார்க்க