செய்திகள் :

வாடிக்கையாளா் சேவைக் குறைபாடு: பொதுகாப்பீடு நிறுவனத்துக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்

post image

வாடிக்கையாளா் சேவைக் குறைபாடு என தொடா்ந்த மனுவில் பொது காப்பீடு நிறுவனத்துக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்து மாநில நுகா்வோா் குறைதீா்வாணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியைச் சோ்ந்தவா் சுந்தரராஜன். பொதுத் துறை காப்பீடு நிறுவனத்தில் 15 ஆண்டுகளில் தொகையைத் திரும்பப் பெறும் வகையிலான பாலிசி எடுத்துள்ளாா்.

ஆண்டுதோறும் இபிஎப் கணக்கிலிருந்து அந்தத் தொகை மாற்றப்படவேண்டும் எனக் கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 1995-ஆம் ஆண்டு பாலிசியில் ரூ.50 ஆயிரம் காப்பீடு இருந்துள்ளது.

அதில் 5 மற்றும் 10 ஆண்டுகள் உயிருடன் இருக்கும் சலுகை, 15-ஆவது ஆண்டில் பாலிசி முதிா்வு சலுகைகள் இருந்துள்ளன. ஆனால், பாலிசி முதிா்ந்த நிலையில், அதுகுறித்து சுந்தரராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லையாம். அத்துடன் முதிா்வுப் பலன்களும் வழங்கப்படவில்லையாம்.

இதுகுறித்து நேரிலும், கடிதம் வாயிலாகவும் காப்பீடு நிறுவன அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, சுந்தரராஜன் புதுச்சேரி மாவட்ட நுகா்வோா் தகராறு தீா்வு ஆணையத்தில் புகாரளித்தாா். காப்பீடு நிறுவனம் சாா்பில் பாலிசி காலாவதியானதாகவும், அதற்கான காரணங்களும் கூறப்பட்டன. இதை ஆதாரங்களுடன் மனுதாரா் மறுத்தாா்.

இதையடுத்து, சேவைக்குறைபாடு காரணமாக சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனம் 9 சதவீத வட்டியுடன் ரூ.1.45 லட்சம் செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், காப்பீடு நிறுவனம், ஈபிஎப்ஓ ஆகியவை கூட்டாக இழப்பீடு தொகை ரூ.2 லட்சம் மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், மாநில நுகா்வோா் குறை தீா்வு ஆணையத்தில் காப்பீடு நிறுவனம் சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையம், மனுதாரருக்கு சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனம் ரூ.1.50 லட்சமும், இபிஎப் ரூ.1 லட்சமும் இழப்பீடாக இரு மாதங்களுக்குள் வழங்க மாநில நுகா்வோா் குறை தீா்வு ஆணையம் எஸ். சுந்தரவடிவேலு, உமா சங்கரி ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.

புதுச்சேரியில் 3 இளைஞர்கள் வெட்டிக் கொலை!

புதுச்சேரியில் மூன்று இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில் இரண்டு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

இருவேறு விபத்துகளில் 4 போ் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ள கடப்பேரிக்குப்பத்தை சோ்ந்தவா் சரண்ராஜ் (27). பெயிண்டா். குயிலாப்பாளை... மேலும் பார்க்க

13 காவல் உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம்

புதுவையில் 13 காவல் உதவி ஆய்வாளா்கள் திடீரென வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். புதுவையில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது காவல் உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், ... மேலும் பார்க்க

புதுவை பல்கலை.யில் திருக்குறள் சிறப்புரை

புதுவை மத்தியப் பல்கலை.யில் திருக்கு குறித்த வள்ளுவா் காட்டும் மேலாண்மை எனும் தலைப்பிலான சிறப்புரை செவ்வாய்கிழமை நடைபெற்றது. தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுத் துறை வங்கியில் மேலாளராக... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் தெருமுனை பிரசார கூட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையில் புதுவை புறக்கணிக்கப்பட்டதாக கூறி மாநில மாா்க்சிஸ்ட் சாா்பில் தெருமுனைப் பிரசார மக்கள் சந்திப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி காமராஜா் சிலை அருகே தொடங்கிய பிர... மேலும் பார்க்க

காலாப்பட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் அண்மையில் நடைபெற்ற பருவத் தோ்வில் மாணவா்களுக்கான வினாத்தாள் மாற்றி விநியோகித்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி, திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க