செய்திகள் :

வான்வெளியை மூடிய ஈரான்; மகன் திருமணத்துக்கு செல்லாத ட்ரம்ப்! - மீண்டும் தாக்குதல் தொடங்க திட்டமா?

post image

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் கடந்த மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஈரானுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தது. அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதேசமயம் ஈரான் விதிக்கும் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

இதனால் இதில் இரு தரப்பினர் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இரு நாடுகளிடையே பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெஹ்ரான் சென்று இருக்கிறார்.

மற்றொருபுறம் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லையெனில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.

எனினும், புதிய தாக்குதல்கள் குறித்த இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வந்த நிலையில், அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மகன் திருமணத்திற்கு செல்லாத ட்ரம்ப்

அதோடு அதிபர் டொனால்டு ட்ரம்ப் வார விடுமுறையை கழிக்க நியூஜெர்சி செல்வது வழக்கம். ஆனால் இந்த வாரம் அதனை ரத்து செய்துவிட்டார். அதோடு இன்று ட்ரம்ப் மகனுக்கு திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்கு கூட செல்லாமல் அதிகாரிகளுடன் ஏற்பாடுகள் குறித்து ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார்.

மகன் திருமணத்திற்கு செல்லாமல் இருப்பது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில், ''இந்த முக்கியமான காலகட்டத்தில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையிலேயே நான் தங்கியிருப்பது முக்கியம் என்று நான் கருதுகிறேன். டான் மற்றும் பெட்டினாவுக்கு வாழ்த்துகள்! என்று அவர் ‘Truth Social’-இல் பதிவிட்டிருந்தார்.

வான்வெளியை மூடிய ஈரான்

மற்றொரு புறம் ஈரானும் போருக்கு ஆயத்தமாகும் வகையில் தனது நாட்டு வான்வெளிப்பகுதியை இன்று முற்றிலுமாக மூடிவிட்டது. ஈரான் அணுகுண்டுகள் தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை வைத்திருக்க கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. ஆனால் தங்களிடம் தற்போது இருக்கும் யுரேனியம் தொடர்ந்து தங்களிடம் தான் இருக்கும் என்று ஈரான் கூறி வருகிறது. 24 மணி நேரத்தில் போர் தொடங்கும் அபாயம் இருப்பதால் வளைகுடா நாடுகளில் பதட்டம் அதிகரித்துள்ளது.

ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதுதான் அதிகமாக தாக்குதல் நடத்தும். இதனால் வளைகுடா நாடுகள் அதனை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. ஏற்கனவே நடந்த போரில் அமெரிக்காவிற்கு 40க்கும் அதிகமான விமானங்கள் சேதம் அடைந்தன. அதோடு ஆயுதங்களின் அளவும் வெகுவாக குறைந்தது. இதனிடையே தான் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.

போர்நிறுத்த காலத்தில் அமெரிக்கா உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களை வளைகுடா பகுதிக்கு மாற்றி இருக்கிறது. அதோடு தைவான் உட்பட சில நாடுகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது தங்களுக்கு ஆயுதங்களின் தேவை அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே பள்ளி, ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண்!பத்தாம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகளின் ஆச்சர்ய சாதனை!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஓவரூர் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் - வனிதா தம்பதியினரின் இரட்டை மகள்கள் கார்த்திகா மற்றும் கீர்த்திகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற... மேலும் பார்க்க

ரயிலில் திருட்டு போன பேக்; மும்பை தெருக்களில் யாசகம் எடுத்துக்கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவர்

மும்பையில் நூற்றுக்கணக்கான யாசகர்கள் இருக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் புறநகர் ரயில்கள், சாலை சிக்னல்கள், மசூதிகள், கோயில்களில் யாசகம் பெறுகின்றனர். இதுபோன்று யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக மும்பை போ... மேலும் பார்க்க

ஓய்வுபெற ஒரு மாதம் இருந்த நிலையில் நீட் வினாத்தாளை கசியவிட்ட பள்ளி தலைமை ஆசிரியை - கைது செய்த சிபிஐ

நாடு முழுவதும் இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பு கசிந்தது. இது தொடர்பாக மகாராஷ்டிராவில் லாத்தூரை சேர்ந்த ஆசிரியர் சிவ்ராஜ், பேராச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "இவர்களுக்கு யாரும் இல்லை" - குழந்தைகளை பஸ்ஸில் அமரவைத்துவிட்டு காதலனுடன் போன தாய்

மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூரில் இருந்து சாம்பாஜி நகர் செல்லும் பஸ்சில் இரண்டு சிறார்கள் தனியாக அழுது கொண்டு அமர்ந்து இருப்பதை பஸ் நடத்துனர் கவனித்தார். பஸ் பீட் என்ற இடத்திற்கு வந்தபோதுதான் அக்குழந்த... மேலும் பார்க்க

டீசல் பற்றாக்குறை; உழவுக்கு டிராக்டருக்கு பதில் பாரம்பர்ய மாடுகளுக்குத் திரும்பும் மகா., விவசாயிகள்

மகாராஷ்டிராவில் சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை விவசாயத்திற்கு டிராக்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய டிராக்டராவது இருக்கும். ஆனால் சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோ... மேலும் பார்க்க