செய்திகள் :

வான்வெளியை மூடிய ஈரான்; மகன் திருமணத்துக்கு செல்லாத ட்ரம்ப்! - மீண்டும் தாக்குதல் தொடங்க திட்டமா?

post image

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் கடந்த மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஈரானுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தது. அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதேசமயம் ஈரான் விதிக்கும் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

இதனால் இதில் இரு தரப்பினர் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இரு நாடுகளிடையே பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெஹ்ரான் சென்று இருக்கிறார்.

மற்றொருபுறம் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லையெனில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.

எனினும், புதிய தாக்குதல்கள் குறித்த இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வந்த நிலையில், அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மகன் திருமணத்திற்கு செல்லாத ட்ரம்ப்

அதோடு அதிபர் டொனால்டு ட்ரம்ப் வார விடுமுறையை கழிக்க நியூஜெர்சி செல்வது வழக்கம். ஆனால் இந்த வாரம் அதனை ரத்து செய்துவிட்டார். அதோடு இன்று ட்ரம்ப் மகனுக்கு திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்கு கூட செல்லாமல் அதிகாரிகளுடன் ஏற்பாடுகள் குறித்து ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார்.

மகன் திருமணத்திற்கு செல்லாமல் இருப்பது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில், ''இந்த முக்கியமான காலகட்டத்தில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையிலேயே நான் தங்கியிருப்பது முக்கியம் என்று நான் கருதுகிறேன். டான் மற்றும் பெட்டினாவுக்கு வாழ்த்துகள்! என்று அவர் ‘Truth Social’-இல் பதிவிட்டிருந்தார்.

வான்வெளியை மூடிய ஈரான்

மற்றொரு புறம் ஈரானும் போருக்கு ஆயத்தமாகும் வகையில் தனது நாட்டு வான்வெளிப்பகுதியை இன்று முற்றிலுமாக மூடிவிட்டது. ஈரான் அணுகுண்டுகள் தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை வைத்திருக்க கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. ஆனால் தங்களிடம் தற்போது இருக்கும் யுரேனியம் தொடர்ந்து தங்களிடம் தான் இருக்கும் என்று ஈரான் கூறி வருகிறது. 24 மணி நேரத்தில் போர் தொடங்கும் அபாயம் இருப்பதால் வளைகுடா நாடுகளில் பதட்டம் அதிகரித்துள்ளது.

ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதுதான் அதிகமாக தாக்குதல் நடத்தும். இதனால் வளைகுடா நாடுகள் அதனை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. ஏற்கனவே நடந்த போரில் அமெரிக்காவிற்கு 40க்கும் அதிகமான விமானங்கள் சேதம் அடைந்தன. அதோடு ஆயுதங்களின் அளவும் வெகுவாக குறைந்தது. இதனிடையே தான் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.

போர்நிறுத்த காலத்தில் அமெரிக்கா உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களை வளைகுடா பகுதிக்கு மாற்றி இருக்கிறது. அதோடு தைவான் உட்பட சில நாடுகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது தங்களுக்கு ஆயுதங்களின் தேவை அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க