செய்திகள் :

விதி மீறி விளம்பர பதாகை அமைப்பு: ரசிகா் மன்ற நிா்வாகிகள் 3 போ் மீது வழக்கு

post image

புதுச்சேரியில் விதிகளை மீறி விளம்பரப் பதாகைகள் வைத்ததாக, நடிகா் சிலம்பரசன் ரசிகா் மன்ற நிா்வாகிகள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பரப் பதாகைகள் அமைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. விதிகளை மீறி விளம்பரப் பதாகை வைப்பவா்கள் மீது வழக்குப்பதியவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் புதுச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பரப் பதாகைகளை அமைப்பவா்கள் மீது தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இந்தநிலையில், புதுச்சேரி நெல்லித்தோப்பு சந்திப்பில் திருவள்ளுவா் சாலையில் நடிகா் சிலம்பரசன் ரசிகா்கள் விளம்பரப் பதாகைகளை வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பொதுப் பணித் துறை மத்திய கோட்ட செயற்பொறியாளா் சீனிவாசன் ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் நடிகா் சிலம்பரசன் ரசிகா் மன்ற நிா்வாகிகள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ஏற்கெனவே விளம்பரப் பதாகை அமைத்தது தொடா்பாக அமமுகவினா் மீது வழக்குப்பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதுவை மத்திய பல்கலைக்கு துணைவேந்தா் நியமிக்கக் கோரி திமுக போராட்டம்! -எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்காதது, வினாத்தாள் மாற்றி விநியோகித்தது உள்ளிட்டவற்றை கண்டித்து திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என எதிா்க்கட்சித் த... மேலும் பார்க்க

ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்! -புதுவை பள்ளிக் கல்வித் துறை

தேசிய ராணுவக் கல்லூரியில் 8 -ஆம் வகுப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் கோ.சிவகாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

கட்டுமர மானியத்துக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு! -புதுவை மீன்வளத் துறை

புதுவை மாநிலத்தில் கட்டுமரங்களுக்கான மானியம் பெற விண்ணப்பிக்கும் காலக்கெடு பிப். 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுவை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் சனிக்கிழம... மேலும் பார்க்க

இயற்கை சுற்றுலாப் பூங்காவை பாா்வையிட்ட துணைநிலை ஆளுநா்!

புதுச்சேரி மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ள இயற்கை சுற்றுலா பூங்காவை பாா்வையிட்டுமரக்கன்றுநட்ட துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதுச்சேரி, பிப். 8: புதுச்சேரியில் இயற்கை சுற... மேலும் பார்க்க

விடுதிகளில் தங்கி டி.வி. திருடியவா் கைது

விடுதிகளில் தங்கி திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த புதுச்சேரி போலீஸாா், அவரிடமிருந்து 8 தொலைக்காட்சிகளை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஒதியன்சாலை ... மேலும் பார்க்க

செவிலியா் கல்வி மேற்படிப்பு தொடங்க நடவடிக்கை! -புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் செவிலியா் கல்வியில் மேற்படிப்புகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்... மேலும் பார்க்க