செய்திகள் :

'விமர்சித்த உதயநிதி; மாலையில் திடீரென அவைக்குள் வந்த முதல்வர் விஜய்!' - பின்னணி என்ன?

post image

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், முதல்வர் விஜய் திடீரென மாலை நேரத்தில் அவைக்குள் வந்து செங்கோட்டையன் அருகே அமர்ந்து அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். அவைக்குள் முதல்வர் விஜய் திடீரென என்ட்ரி கொடுத்ததன் பின்னணி என்ன?

அமைச்சர்களுடன் முதல்வர் விஜய்
அமைச்சர்களுடன் முதல்வர் விஜய்

சமூகநீதித்துறை, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று அவையில் நடந்திருந்தது. முதல்வர் விஜய் இன்று காலையில் ஒரு தனியார் மருத்துவமனையின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதன் பின் தலைமைச் செயலகத்தில் புதிதாக பணியில் சேருவோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதை முடித்துவிட்டு நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க அமைச்சர்களுடன் அவசர ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதனால் மதியம் வரைக்கும் முதல்வர் விஜய் அவைக்கு வரவில்லை. இந்நிலையில், திடீரென இன்று மாலை அவைக்கு வந்து தன்னுடைய இருக்கையில் அமராமல் இடம் மாறி, செங்கோட்டையன் அருகே அமர்ந்து அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

முதல்வர் திடீரென மாலை நேரத்தில் அவைக்கு வந்ததன் பின்னணி என்னவென கோட்டை வட்டாரத்தில் விசாரிக்கையில், 'முதல்வர் விஜய் தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அவைக்குள் இருந்து விவாதங்களை கவனிப்பார். பின்னர் அவரின் அலுவல் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்காகச் சென்றுவிடுவார். மாலை 5 மணிவாக்கில் வீட்டுக்கு கிளம்பிவிடுவார். இன்று பல்வேறு பணிகள் காரணமாக மதியம் வரைக்குமே அவரால் அவைக்கு வர முடியவில்லை. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காலையிலேயே முதல்வர் ஆப்சென்ட் ஆனதை குறிப்பிட்டு 'கரூர் சம்பவத்தின் போது முதல்வர் அவையிலிருந்து பேசினார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இன்று நேபாள விவகாரத்துக்காக கவன ஈர்ப்பு தீர்மானம் கேட்டிருக்கிறோம். அவையில் முதல்வரும் இல்லை. தலைமைச் செயலாளரும் இல்லை' எனப் பேசியிருந்தார். இதுவும் முதல்வரின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. அதனால்தான் அலுவல் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பாமல் நேராக அவைக்கே வந்துவிட்டார். செங்கோட்டையன் அருகே அமர்ந்து அவரிடமும் ஆதவ்விடமும் அவையில் நடந்த முக்கியமான விஷயங்களை கேட்டும் தெரிந்து கொண்டார்' என்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மதியமே சட்டமன்றத்திலிருந்து கிளம்பிவிட்டார். தவெகவின் ஐ.டி.விங் இதை கையிலெடுத்து 'முதல்வர் இங்கே இருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் எங்கே?' என விமர்சித்து வருகின்றனர்.

`அரசுக்கு திமுக பஞ்சபாண்டவர்களாக துணை நிற்கும்!' – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், ``மாநில அந்தஸ்துக்காக அரசு குரல் கொடுக்கும்போது, பஞ்சபாண்டவர்கள் போல தி.மு.க எப்போத... மேலும் பார்க்க

`தம்பி ஆதவ், நீ எழுந்தா தான் சண்டை வருது; 8-ம் தேதி வரைக்கும் பேசாதீங்க..!'- பிரேமலதா

சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ ராஜாவுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே ஏற்பட்ட காரசார வாக்குவாதத்தைக் கண்டித்த பிரேமலதா விஜயகாந்த், "இது சட்டமன்றமா? சண்டை மன்றமா? மானியக் கோரிக்கையை தவிர எல்ல... மேலும் பார்க்க

`சட்டமன்றம் தனிநபர் மோதல்கள் நிறைந்த 'டிராமா மன்றமாக' மாறிவிடக் கூடாது!' - அண்ணாமலை

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “சீன அரசின் அனுமதி பெற்று நேபாளம் வழியாக கைலா... மேலும் பார்க்க

'இது சட்டமன்றமா... இல்ல சண்டை மன்றமா?' - திடீரென கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவின் சட்டமன்ற உறுப்பினரான பிரேமலதா அவையில் திடீரென, 'இது சட்டமன்றமா இல்லை சண்டை மன்றமா...' என கொந்தளித்திருக்கிறார்.சட்டமன்றம்சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கிறத... மேலும் பார்க்க

``மோடி அரசின் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா?" - மாணிக்கம் தாகூர்

மத்திய அரசு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை நிறுத்திவைத்து பிளாக்மெயில் செய்வதாக காங்கிரஸ் தலைவரும், எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும்... மேலும் பார்க்க

``இமயமலை பிராந்தியம் ஆபத்தான பகுதி; இந்தியா, சீனா, நேபாளம் இணைந்து செயல்பட வேண்டும்"- நேபாள அமைச்சர்

இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களின்படி, நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அதில் 133 பேர் இந்தியர்கள். நேற்று நடந்த இந்தச... மேலும் பார்க்க