செய்திகள் :

விருதுநகர்: 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்; பட்டியலில் பெயரைச் சரிபார்க்க ஆட்சியர் வலியுறுத்தல்!

post image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை விருதுநகர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சுகபுத்ரா, இன்று மாலை வெளியிட்டார். சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தத்திற்கு முன் 16 லட்சத்து 26 ஆயிரத்து 485 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தத்திற்குப் பின் மொத்தம் 14 லட்சத்து 36 ஆயிரத்து 521 வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்

தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம்:

ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 2,01,901 வாக்காளர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,13,665 வாக்காளர்கள், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,18,801 வாக்காளர்கள், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 2,14,544 வாக்காளர்கள், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் 1,90,824 வாக்காளர்கள், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,98,996 வாக்காளர்கள், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 1,97,790 வாக்காளர்கள்.

அருப்புக்கோட்டை (வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ) தொகுதியில் 23,252 வாக்காளர்கள். திருச்சுழி (நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு) சட்டமன்றத் தொகுதியில் 20,542 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்

வாக்குச்சாவடிகள் விவரம்:

முன்பு இருந்த வாக்குச்சாவடிகள்: 1,901

புதிய வாக்குச்சாவடிகள்: 98

தற்போது உள்ள மொத்த வாக்குச்சாவடிகள்: 1,999

சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தத்தின்போது நீக்கப்பட்டவர்கள் - 1,89,964

இறந்தவர்கள்: 73,279

முகவரி இல்லாதவர்கள்: 10,722

குடிபெயர்ந்தோர்: 95,609

இரட்டைப் பதிவுகள்: 10,135

இதர: 219

ஆட்சியர் சுகபுத்ரா

மேற்படி சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தம்-2025 இன் போது வாய்ப்பைத் தவறவிட்டோர் மற்றும் 01.01.2026 அன்று 18+ வயதைப் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய விழையும் அனைவரும், இத்தேதிக்குப் பின் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் தொடர் மேம்பாட்டுக் காலத்தில், Voter Service Portal, Voters Helpline App, Saksham App வழியிலும், உரிய படிவங்களைப் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வட்ட, கோட்ட மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் சமர்ப்பிக்கலாம். அதேபோல் தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன அனைவரும் கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்; AC, Non AC வகுப்புகளுக்கு எவ்வளவு? - இந்திய ரயில்வே அறிவிப்பு

இந்திய ரயில்வே துறை தற்போது புதிய கட்டண மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றம் வருகிற 26-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.கட்டண மாற்றங்கள் இதோ...> துணை நகர்ப்புற (Urban) டிக்கெட்டுகள் மற்றும் மாத ச... மேலும் பார்க்க

SIR -க்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல்: கோவை மாவட்டத்தில் மட்டும் 6,50,590 வாக்காளர்கள் நீக்கம்!

பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்க... மேலும் பார்க்க

RBI-ன் ஓரேயொரு மூவ்: வலுவான இந்திய ரூபாய்; ஓடி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - அது என்ன?

சில நாள்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. அது 91-ஐ தாண்டி எல்லாம் சென்றது. இந்த நிலையில் தான், நேற்று சந்தையின் முடிவில் 90.38-க்கு இறங்கி இந்திய ரூபாயி... மேலும் பார்க்க

முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு முல்லை பெரியாறு அணை, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. கடந... மேலும் பார்க்க

செங்கோட்டை நகர்மன்ற கூட்டம்: ``செருப்பால் அடிப்பேன்'' - திமுக நகர்மன்ற தலைவி பேச்சால் பரபரப்பு

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தி.மு.க நகர்மன்ற தலைவி ராமலட்சுமி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு,... மேலும் பார்க்க

``கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாஜக பற்றி பேசாதாது ஏன்?'' - CPIM பெ.சண்முகம் கேள்வி

கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த சம்பவத்திற்குப் பிறகு 40 நாள்களுக்கு மேல் பொதுவெளிக்கு வராமல் இருந்த விஜய், கடந்த நவம்பர் மாதம் முதல் ... மேலும் பார்க்க