செய்திகள் :

முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு

post image

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு முல்லை பெரியாறு அணை, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 11-ந்தேதி அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதற்காக துணைக் குழுவின் தலைவரான தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென்மண்டல இயக்குநர் கிரிதர் தலைமையில், தமிழக உறுப்பினர்களான முல்லைப்பெரியாறு அணையின் கண்காணிப்புப் பொறியாளர் சாம் இர்வின், செயற்பொறியாளர் செல்வம், கேரள உறுப்பினர்களான கண்காணிப்புப் பொறியாளர் கோஷி. கட்டப்பனை செயற்பொறியாளர் லிவின்ஸ்பாபு ஆகியோர் தேக்கடிக்கு வந்து அங்கிருந்து படகுகள் மூலம் அணைக்குச் சென்றனர்.

முல்லை பெரியாறு அணை

அணைப் பகுதியில், பிரதான அணையை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்த மதகுகளை இயக்கி சோதனை செய்தனர். பின்னர் பிரதான அணை வழியாக பேபி அணைக்கு நடந்து சென்று ஆய்வு செய்தனர்.  சுரங்கப்பகுதியில் கசிவுநீர் அளவை பார்வையிட்டனர். அணையின் நீர்மட்டத்துக்கு ஏற்ப அது இயல்பான அளவில் இருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முல்லை பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகள், பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

செங்கோட்டை நகர்மன்ற கூட்டம்: ``செருப்பால் அடிப்பேன்'' - திமுக நகர்மன்ற தலைவி பேச்சால் பரபரப்பு

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தி.மு.க நகர்மன்ற தலைவி ராமலட்சுமி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு,... மேலும் பார்க்க

``கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாஜக பற்றி பேசாதாது ஏன்?'' - CPIM பெ.சண்முகம் கேள்வி

கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த சம்பவத்திற்குப் பிறகு 40 நாள்களுக்கு மேல் பொதுவெளிக்கு வராமல் இருந்த விஜய், கடந்த நவம்பர் மாதம் முதல் ... மேலும் பார்க்க

இந்தியாவின் 65 சதவீத சொத்துகளை வைத்திருக்கும் 10 சதவீத பணக்காரர்கள்; ஆய்வறிக்கை சொல்வது என்ன?

2026-ம்‌ ஆண்டிற்கான உலக சமத்துவமின்மை அறிக்கை வெளியாகி உள்ளது.இது 2018, 2022 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக வரும் அறிக்கை இது ஆகும்.அதில் கூறப்பட்டுள்ளவை...இந்தியாவின் முதல் 1 சதவிகித பணக... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத்தொகை: "நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்?" - அமைச்சர் KKSSR விளக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கத்தை வெள்ளியன்று மாலை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலை... மேலும் பார்க்க

``தமிழ் கடவுள் முருகரை எப்படி வழிபடணும்னு எங்களுக்குச் சொல்லித் தர வேண்டாம்'' -திமுக தென்காசி எம்.பி

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க