செய்திகள் :

திமுக எம்.எல்.ஏ கார் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே விவசாயி பலியான சோகம்!

post image

திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன். இவர் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக இருக்கிறார். தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு சென்று விட்டு மீண்டு தஞ்சாவூர் திரும்பினார். காரை டிரவைர் ஓட்டியுள்ளார். அப்போது தென்னமநாடு, நடுத்தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ்(50) காருக்கு முன்னே சென்றுள்ளார். கார் வேகமாக சென்றதாக சொல்லப்படுகிறது.

விபத்தில் பலியான கோவிந்தராஜ்

இந்நிலையில் தென்னமநாட்டில் கோவிந்தராஜ் சென்ற டூவீலர் மீது கார் வேகமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைபார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்து கோவிந்தராஜ்க்கு முதலுதவி செய்வதற்கு ஓடினர். துரை.சந்திரசேகரனும் காரை விட்டு இறங்கி சென்று பார்த்தார். ஆனால் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.

அங்கிருந்த திமுகவினர் சிலர் உயிர் இருப்பதாக சொல்லி சந்திரசேகரனை மற்றொரு காரில் அனுப்பி வைத்து விட்டனர். இதையறிந்த கோவிந்தராஜனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரத்தநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசிய உறவினர்கள் சிலர், வயலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது டூவீலரில் கோவிந்தராஜ் சென்றார்.

கார்

அப்போது அதிவேகமாக வந்த திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் கார், டூவீலர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் பலியாகி விட்டார். இதில் காரின் முன் பகுதி சேதமடைந்தது. தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழலில் கார் மெதுவாக வந்திருக்கலாம். வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்கிறார்கள். இறந்த கோவிந்தராஜின் மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இரண்டு மகள்கள் உள்ளனர் என்றனர்.

தருமபுரி: தொப்பூரில் பின்னால் வந்த லாரி, முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்து - 4 பேர் பலி

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்ற லாரி, இருசக்கர வாகனம், ஆம்னி வேன், கார் மீது மோதியதில் தம்மணம்பட்டியை சேர்ந்த அருண... மேலும் பார்க்க

உ.பி: 3 கார்கள், 6 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து; 4 பேர் உயிரிழப்பு - பனியால் நேர்ந்த சோகம்

உத்திரபிரதேசம் மதுராவில் உள்ள டெல்லி - ஆக்ரா விரைவுச்சாலையில் இன்று அதிகாலையில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த பல பேருந்துகள் தீப்பற்றி எரிந்துள்ளன.... மேலும் பார்க்க

கோவா தீ விபத்து: `எப்படியும் போனை எடுத்து பேசுவார்னு நினச்சேன்’ - கணவன், 3 சகோதரிகளை பறிகொடுத்த பெண்

கோவா சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமான இடம். அதுவும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் உலகம் முழுவதும் இருந்து கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். கோவாவில் உள்ள இரவு நேர மதுபான விடுதிக... மேலும் பார்க்க

Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் - என்ன நடந்தது?

கோவாவின் ஆர்போராவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேனில்' நேற்றிரவு பாலிவுட் பேங்கர் நைட் பார்ட்டி நடந்தது. அதிக சத்தமுள்ள இசைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நடனமாடிக் கொண்டாடினர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்... மேலும் பார்க்க

கோவா: நைட் கிளப்பில் தீ‌ விபத்து; 25 பேர் உயிரிழப்பு - தீப்‌பற்றியது எப்படி?

நேற்று நள்ளிரவு, கோவா ஆர்போராவில் உள்ள ரோமியோ லேன் நைட் கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 22 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.என்ன ந... மேலும் பார்க்க

உ.பி: தேர்வு எழுதிக்கொண்டிருந்த 12 வயது மாணவனுக்கு மாரடைப்பு: சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்!

இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிக அளவில் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தவர் அமய் சிங்(12). இம்மாணவன் ... மேலும் பார்க்க