செய்திகள் :

'நிதிஷின் மனநலம் பரிதாபகராமக உள்ளது' - பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்த முதல்வர்; வழுக்கும் கண்டனம்

post image

நேற்று பீகாரில் ஆயுஷ் மருத்துவர் பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்டு பட்டமளித்தார்.

அந்த விழாவில் பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து பட்டம் பெற வந்தார். அவரை ஹிஜாப்பை நீக்குமாறு கூறிகொண்டே, அவரது ஹிஜாப்பை இழுத்துவிட நிதிஷ் குமார் முயற்சி செய்தார்.

நிதிஷ் குமாரின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்று
பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்று

காங்கிரஸ்

நிதிஷ் குமாரின் இந்தச் செயலுக்கு காங்கிரஸ், "பீகாரின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் வெளிப்படையாகவே இந்த மாதிரியான கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார். அந்த மாநிலத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள் என்று யோசியுங்கள்.

நிதிஷ்குமார் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கீழ்தரமான செயலை மன்னிக்க முடியாது" என்று எக்ஸ் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

ராஷ்டிரியா ஜனதா தளம்

ராஷ்டிரியா ஜனதா தளம் தனது எக்ஸ் பக்கத்தில், "நிதிஷ் ஜிக்கு என்ன ஆனது? அவரது மனநலம் முழுமையாக பரிதாபகரமாக ஆகிவிட்டது அல்லது நிதிஷ் பாபு 100 சதவிகிதம் சங்கி ஆகிவிட்டார்" என்று பதிவிட்டுள்ளது.

'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகாப்பு குழு புகார்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை கதவுகள் ஆகியவற்றில் செம்பு தகட்டின் மீது பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வழக்க... மேலும் பார்க்க

``வாக்குப்பதிவு இயந்திரத்தால்தான் 4 முறைவெற்றி பெற்றேன்" - ராகுலுக்கு ஷாக் கொடுத்த சுப்ரியா

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடப்பதாகவும், வாக்குகள் திருடப்படுவதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்காக நாடு முழுவதும் போராட்டமும் நடத்... மேலும் பார்க்க

கழற்றிவிட்ட திமுக; கைகொடுத்த அதிமுக - கிருஷ்ணகிரி நகர்மன்ற முன்னாள் தலைவர் கட்சி மாறியப் பின்னணி!

கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவராக இருந்தவர் ஃபரிதா நவாப். இவர், தி.மு.க-வில் தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் கட்சிப் பொறுப்பில் இருந்துவந்தார். இவருக்கு எதிராக 16-10-2025 அன்று ஆளுங்கட்சி கவுன்சிலர்களே... மேலும் பார்க்க

'ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா...'- நாடாளுமன்றம் வரை ஹிட்டான கேரள அரசியல் பகடி பாடல்!

கேரளத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. சி.பி.எம் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் சமயத... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்டம் : அறிமுகமாக இருக்கும் புதிய நடைமுறைகள் என்னென்ன?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் - இந்திய அரசியல் களத்தில் இப்போதைய தலைப்பு செய்தி. 2008-ம் ஆண்டு முதல், இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தை 'மகாத்மா காந்தி... மேலும் பார்க்க