செய்திகள் :

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தடை! – காரணம் என்ன?

post image

தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை, கோவை அருகேயுள்ள பூண்டி பகுதியில் அமைந்துள்ளது. பூண்டி அடிவாரத்தில் இருந்து, மலை மீது அமைந்துள்ள சுயம்புலிங்கத்தை தரிசிக்க 5.5 கி.மீ தூரம் மலைப்பாதையில் வனப்பகுதிகள் வழியாக மலையேற்றம் செய்ய வேண்டும். இந்த மலையில் ஏழு ஏற்ற இறக்கங்கள் இருப்பதால், மலையேற்றம் செய்பவர்களுக்கு ஏழு மலைகள் ஏறியதைப் போன்ற அனுபவம் ஏற்படுவதால், இதனை ஏழுமலை எனவும் அழைக்கின்றனர். வெள்ளியங்கிரி மலையேற ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர். குறிப்பாக மகா சிவராத்திரி முதல் சித்ரா பெளர்ணமி வரை அதிக அளவிலான பக்தர்கள் மலையேறுவது வழக்கம். இதன்படி இந்தாண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி வந்தனர்.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இனி வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை அதிகளவு இருக்கும் என்பதால், பக்தர்கள் நலன் கருதி வெள்ளியங்கிரி மலையேற தடை விதிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்படி இன்று முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வெள்ளியங்கிரி மலையேற மே மாதம் இறுதிவரை அனுமதி வழங்கப்படும் நிலையில், 2 வாரங்களுக்கு முன்னதாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் : மாவிளக்கு போட்டு வேண்டிக்கிட்டா மங்கலங்கள் அருள்வாள்!

அன்னை கருமாரி காக்கும் கடவுளாக ஊர்தோறும் இருந்து அருள்பாலித்துவருகிறாள். நோய் நொடிகளில் இருந்து ஊர்மக்களைக் காக்கும் மாரியே உரிய காலத்தில் மழையைப் பெய்ய வைத்து விவசாயம் செழிக்கவும் அருள்பவள். அப்படிப்... மேலும் பார்க்க

கோவை மாவட்டம் வெள்ளலூர் தேனீஸ்வரர் திருக்கோயில்: வேண்டிய வரம் அருளும் மும்மூர்த்திகள் சந்நிதி!

ஈசன் சுயம்பு மூர்த்தமாக அருள்பாலிக்கும் தலங்கள் மகிமை நிறைந்தவை. அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் சிவத்தலங்கள் அனைத்துமே மிகவும் சிறப்பு பெற்றவை. அப்படி ஒரு ஆலயம்தான் வெள்ளலூர் தேனீஸ்வரர் கோய... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை முருகன்: பிள்ளைவரம் தரும் பாலசுப்பிரமண்ய சுவாமி!

தென் மாவட்டங்களில் திருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்கிற கவலைப்படுபவர்களிடம் பெரியவர்கள், வெள்ளிமலை பாலமுருகனை தரிசித்துவாருங்கள். அந்த முருகனே உங்களுக்குக் குழந்தையாகப் பிறப்பான் என்பார்கள்... மேலும் பார்க்க

கோவையில் பிரம்மாண்டமாக கட்டப்படும் திருப்பதி கோவில் - திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல்!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஏழுமலைகள் என அழைக்கப்படும் சேஷாசல மலை உச்சியில் ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் உலகின் செல்வந்த புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக வ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டம் முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில்: தீய சக்திகளை விரட்டி நல்லருள் தருவாள்!

ஊர்தோறும் அம்மன்கோயில்கள் உண்டு. அவளே காக்கும் தெய்வம். கருமாரி, காமாட்சி, மீனாட்சி என்று பல்வேறு நாமங்கள் கொண்டு மக்களைக் காப்பவள். அவளே பச்சையம்மனாக அருள்பாலிக்கும் தலங்கள் பல உண்டு. அவற்றில் முக்கி... மேலும் பார்க்க

சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் திருக்கோயில்: பெண்களுக்கு செல்வவளமும் நலமும் அருளும் அம்பாள் சந்நிதி!

மயிலாப்பூர் என்றதும் நம் நினைவுக்கு வருவது கபாலீஸ்வரர் திருக்கோயில். பலரும் அறியாதது கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி அமைந்திருக்கும் சிவத்தலங்கள் குறித்து. மயிலையில் அமைந்திருக்கும் 7 சிவத்தலங்களையும் 'சப... மேலும் பார்க்க