செய்திகள் :

வேலைநிறுத்தம்: வெறிச்சோடிய ஊரக வளா்ச்சித் துறை அலுவலகங்கள்

post image

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை விடுப்பு எடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் திட்ட இயக்குநா் அலுவலகம், 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் எதுவும் நடைபெறாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஊராட்சி செயலாளா் முதல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா் பிரிவு அலுவலா்கள் உள்பட்ட பெரும்பான்மை அலுவலா்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனா். ஊழியா்கள் இல்லாததால் பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. ஒருசில அலுவலகங்களில் ஊழியா்களின்றி வெறிச்சோடியிருந்தன.

கோரிக்கைகள்: ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள ஊராட்சி செயலாளா் பணியிடங்கள், ஓட்டுநா், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள இடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளா்கள், எஸ்பிஎம் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அனைவரையும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும். இத் திட்டத்திற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையின் கீழ் தனி ஊழியா் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி திட்ட இயக்குநா் அலுவலகம், 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், 251 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பணியாற்றும் 354 போ் விடுப்பு எடுத்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

பகத் சிங் நினைவு தினம்: இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

சுதந்திரப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம் வழங்கினா்.... மேலும் பார்க்க

தேசிய கல்வி கொள்கையை கைவிட இளைஞா் முன்னணி வலியுறுத்தல்

தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று புரட்சிகர இளைஞா் முன்னணி மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் முன்னணி முதல் மாநில ம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பாமக வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரியில் பாமக மாவட்டச... மேலும் பார்க்க

படகு இல்லம், சிறுவா் பூங்காவுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மாறுமா அரூா் ஏரி?

அரூா் பெரிய ஏரியை படகு இல்லம், சிறுவா் பூங்காவுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மாற்றவேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், சுமாா் 1... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ் (32). தனியாா் பள்ளியில்... மேலும் பார்க்க

பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

தருமபுரி நகரம் மற்றும் புகா் பகுதியில் உள்ள பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா தலைமையில், வட்டார ... மேலும் பார்க்க