செய்திகள் :

``ஸ்மார்ட் போன், ஆஃப் பேன்ட் அணியத் தடை; பைஜாமா அணிய வேண்டும்" - உ.பி கிராமங்களின் முடிவு!

post image

ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்கள் சிறுமிகளுக்கு ஸ்மார்ட்போன்களுக்குத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு பரவலாக எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்கள் தங்கள் தடை முடிவை திரும்பப் பெற்றன. மேலும் கிராமத் தலைவர்கள், "தங்களின் இந்த முன்மொழிவு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட 'சீரான சமூக ஒழுக்கத்தை' மையமாகக் கொண்டது" என விளக்கமளித்தனர்.

Smart phone
Smart phone

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பாக்வத் மாவட்டத்தில் உள்ள பல பஞ்சாயத்துகளின் தலைவர்கள், சிறுவர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதற்கும், அரைக்கால் சட்டை அணிவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

தொடர்பாக அவர்கள் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தில், "சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரே மாதிரியான சமூக விதிகள் பொருந்த வேண்டும். சிறுவர்கள் வீட்டிலும் பொது இடங்களிலும் அரைக்கால் சட்டை அணிவதற்குப் பதிலாக, கால்சட்டை அல்லது பாரம்பரிய குர்தா-பைஜாமா போன்ற சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும். அரைக்கால் சட்டை அணிவது உள்ளூர் மரபுகளுக்கு எதிரானது. மேலும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கைபேசிகள் வழங்கப்படக் கூடாது.

பெரியவர்கள்கூட ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். கைபேசி சாதனங்களை தேவையற்ற முறையில் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒழுக்கத்தையும் சமூக சமநிலையையும் பராமரிக்க, சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் சமமான கட்டுப்பாடுகளைக் குடும்பங்கள் உறுதி செய்ய வேண்டும்.

சமூகப் பிணைப்புகளைப் பாதுகாப்பதற்காகத் திருமண விழாக்கள் வீடுகளிலோ அல்லது கிராமங்களிலோ நடத்தப்பட வேண்டும். திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் நடத்தப்படும் திருமணங்கள் எளிதில் முறிந்துவிடுகின்றன. பாரம்பரிய சமூகப் பிணைப்புகளையும் பலவீனப்படுத்துகின்றன. இருப்பினும், வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் திருமண அழைப்பிதழ்கள் செல்லுபடியாகும்.

திருமணம்
திருமணம்

இந்த முடிவுகள் உத்தரப் பிரதேசம் முழுவதும் ஒரு பரந்த சமூகப் பிரசாரமாக முன்னெடுத்துச் செல்லப்படும். மற்ற பஞ்சாயத்துகளையும் இதில் ஈடுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்." என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

``நாளையுடன் உலகம் அழியப்போகிறது" - தீவிரமாக கப்பல் கட்டும் எபோநோவா?: யார் இவர்? என்ன சொல்கிறார்?

இஸ்லாம் குர்ஆனிலும், கிறிஸ்தவம் பைபிலிலும் நூஹ் - நோவா என்பவரின் சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறது. உலகை அழிக்க நினைத்த இறைவன் இவர் மூலம் நல்லவர்களை காப்பாற்றி இந்த உலகை மீளுறுவாக்கம் செய்ததாக அந்த சம... மேலும் பார்க்க

"நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும்" - லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடு: தனி ஒருவனாக போராடி பலரை காப்பாற்றிய பழக்கடைகாரர் - யார் அந்த ஹீரோ?

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் அமைந்துள்ளது பான்டி (Bondi) கடற்கரை. யூதர்களின் விழாவான ஹனுக்காவை (Hanukkah) கொண்டாட பான்டி கடற்கரையில் சுமார் 1,000 முதல் 2,000 பேர் ... மேலும் பார்க்க

Lionel Messi: ராகுல் காந்திக்கு மெஸ்ஸி கொடுத்த கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 'G.O.A.T. Tour' (Greatest Of All Time Tour) என்ற பெயரில் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கொல்கத்தா, அகமதா... மேலும் பார்க்க

Indigo: `தொடரும் விமான ரத்து, தாமதம்' - பயணிகள் ஆர்ப்பாட்டம்; இண்டிகோ நிறுவனத்துக்கு என்ன பிரச்னை?

இந்தியாவின் முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் ... மேலும் பார்க்க

சிங்கக் கூண்டுக்குள் தானே நுழைந்த இளைஞர் - பிரேசிலில் அதிர்ச்சி சம்பவம் | வீடியோ

பிரேசில் நாட்டில் இருக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில் 19 வயது இளைஞர் ஒருவர் தானாகவே சிங்கத்தின் கூண்டுக்குள் சென்று மாட்டிக்கொண்டு உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த நவம்... மேலும் பார்க்க