செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: செண்பகத்தோப்பு மீன்வெட்டிபாறையில் கடும் வெள்ளப்பெருக்கு; பொதுமக்கள் செல்ல தடை

post image

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடையறாத கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, சாலைகள் பாதிப்பு, அவ்வப்போது மின்விநியோகத் தடைகள் ஏற்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால், மலைப்பகுதிகளிலிருந்து ஓடைகள் வழியாக திடீர் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக செண்பகத்தோப்புப் பகுதியில் உள்ள மீன்வெட்டிபாறை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மீன்வெட்டிபாறை

திடீர் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக செண்பகத்தோப்பு பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. அதேபோல், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் வழிபாட்டிற்காக ஆயிரக்கணக்கானோர் செல்வது வழக்கம். பெய்து வரும் கனமழையால் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சதுரகிரி செல்லும் பாதையில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சதுரகிரி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி: ஆராய்ச்சியாளனின் 200 ஆண்டுகளுக்கு முந்தைய டைரி குறிப்புகள்! - நிரூபணமாகும் வாய்ப்பு?

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளரான பியர் சோனெராட் என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக்கண்டத்தில் தென்பட்ட பல அரிய உயிரினங்களை தனது டைரி குறிப்புகள் மூலம் பதிவு செய்தவர். புகழ்... மேலும் பார்க்க

உலகிலேயே மிகப்பெரிய கரப்பான் பூச்சி இதுதான்; இறக்கையின் அகலம் மட்டும் இவ்வளவா?

கரப்பான் பூச்சி என்றாலே பலருக்கு பயம் ஏற்படும். நம் வீடுகளில் சாதாரணமாகக் காணப்படும் கரப்பான் பூச்சிகள் சிறிய அளவில் இருப்பதே நமக்கு பயமாக இருக்கும். ஆனால் உள்ளங்கையையே மறைக்கும் அளவுக்கு ஒரு கரப்பான்... மேலும் பார்க்க

சிலரை 'அவன் ஒரு புள்ளப்பூச்சி மாதிரி' என்பது ஏன்? பிள்ளைப்பூச்சிப்பற்றிய இன்ட்ரஸ்டிங் தகவல்கள்

இன்றைக்கு நடுத்தர வயதில் இருப்பவர்களுக்குத்தான் இந்தப் பூச்சியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தார் ரோடும், சிமெண்ட் ரோடும் பார்த்துக்கொண்டிருக்கிற இன்றைய தலைமுறையினருக்கு இந்தப் பூச்சியின் ... மேலும் பார்க்க

Karnataka:‌ 16 குட்டிகள் உட்பட 23 புலிகளைப் பிடித்த கர்நாடக வனத்துறை; என்ன நடக்கிறது?

கண்மூடித்தனமான தொடர் வேட்டையின் காரணமாக கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்ட வங்கப் புலிகளின் எண்ணிக்கை தென்னிந்திய காடுகளில் தற்போது மெல்ல மீண்டெழுந்து வருகின்றன. உலகில் வங்கப் புலிகள் அதிகம் ... மேலும் பார்க்க