செய்திகள் :

ஹார்முஸ் நீர்சந்தி: ஈரான், ஓமன் கன்ட்ரோலுக்கு செல்லுமா? சுங்க வரி வசூலா? - ட்ரம்ப் பதில்

post image

ஈரானுக்கு வடக்கேயும், ஓமனுக்கு தெற்கேயும் அமைந்திருக்கிறது ஹார்முஸ் நீர்சந்தி.

ஆனால், இந்த நீர்சந்தியில் தற்போது ஈரானின் கை ஓங்கியிருப்பதால் தான், ஹார்முஸ் நீர்சந்தியை முழுவதுமாக மூடியிருக்கிறது ஈரான்.

தாக்குதல்களால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ஹார்முஸ் நீர்சந்தியில் பயணிக்கும் கப்பல்களிடம் இருந்து சுங்க வரி வசூலித்துக் கொள்கிறோம் என்று ஈரான் சொன்னது.

அந்தச் சுங்க வரியை ஓமானுடனும் பங்கிட்டுக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளது ஈரான்.

ஹார்முஸ் நீர்சந்தி
ஹார்முஸ் நீர்சந்தி
ஒருவேளை, போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஈரானுடன் ஓமனும் குறுகிய காலத்திற்கு ஹார்முஸ் நீர்சந்தியைக் கட்டுப்படுத்த ஒப்பந்தம் போட்டால், அதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? அவர்கள் உடனே ஹார்முஸ் நீர்சந்தியைத் திறக்க வேண்டுமா அல்லது சிறிது காலம் அவர்களுக்குக் கொடுக்கப்படுமா? என்கிற கேள்விகள் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் நேற்று வெள்ளை மாளிகையில் கேட்கப்பட்டன.

"அந்த நீர்ச்சந்தி எல்லாருக்குமே திறந்துதான் இருக்கப் போகிறது. அதை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்று கேட்கிறீர்களா? அது சர்வதேசக் கடல் பகுதி. அதை யாரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது.

நாங்கள் அதை மேலிருந்து கண்காணிப்போம். அவ்வளவுதான். ஆனால் யாரும் அதை ஆக்கிரமித்துக் கட்டுப்படுத்த முடியாது. அதுதான் நம்முடைய பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியே. அவர்களுக்கு அதைக் கட்டுப்பாட்டில் எடுக்க ஆசைதான். ஆனால் யாரும் அதைச் செய்ய முடியாது. அது பொதுவான சர்வதேசக் கடல் பகுதி.

அதேபோல ஓமனும் மற்ற எல்லாரையும் போல ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாம் அவர்களைத் துவம்சம் செய்ய வேண்டியிருக்கும். இது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அதனால் அவர்கள் நல்லபடியாக நடந்து கொள்வார்கள்". என பதில் அளித்திருக்கிறார்.

கும்பகோணம்: ஃப்ளக்ஸ் வைப்பதில் வாக்குவாதம் - தவெகவினர் தாக்கியதில் காவலருக்கு கையில் எலும்பு முறிவு!

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண், காளி. இருவரும் தவெக-வில் வார்டு உறுப்பினர்களாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கும்பகோணத்தில் வெற்றி பெற்ற வினோத் அமைச்சராகியிருக்கிறார். இதையடுத்து அமைச்சர் வின... மேலும் பார்க்க

'நீ நல்லா சாப்பிட்டிருக்க' - புகார் செய்த பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன்

பக்ரீத் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து வசதிகளை ஆய்வு செய்ய சென்றிருந்த போக்குவரத்துத் த... மேலும் பார்க்க

ரூ.2 கோடி; சாக்கு மூட்டையில் கட்டி மண்ணில் புதைத்து வைத்திருந்த திரிணாமுல் கட்சி நகராட்சி தலைவர்!

மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து மம்தா பானர்ஜி அரசு செயல்படுத்தி வந்த திட்டங்களை புதிய முதல்வர் சுவந்து அதிகாரி ம... மேலும் பார்க்க

'ராஜினாமா செய்கிறேன்' - அறிவித்த சித்தராமையா; இனி கர்நாடகா முதல்வர் 'டி.கே.சிவக்குமார்'!

2023-ம் ஆண்டு கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் போதே, இவருக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி... தற்போதைய கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இரண்டரை ஆண்டு ஆட்சி என்று பேசப்பட்டதாக தகவல்க... மேலும் பார்க்க

`வாரியம் வாங்கிக் கொடுங்க தலைவரே' விரட்டும் சிறுத்தைகள் டு 'பார்ட்டி பண்ட் வேண்டாம்' | கழுகார்

நெருக்குதலில் மகிழ்ச்சி மாண்புமிகு!வாரியம் கேட்கும் நிர்வாகிகள்...த.வெ.க ஆட்சியமைத்தாலும் 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோற்றிருக்கிறது. தேர்தலில் நின்று தோற்றவர்கள், கடைசி நேரத்தில் வாய்ப்பு மறுக்க... மேலும் பார்க்க

``எல்‌.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைவது நாகரிகமான அரசியல் அல்ல!" - திருமாவளவன்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லுரி இயங்கி வருகிறது. நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ராதா மோகன் சிங், எம்.பி திருமாவளவன் உள்ளிட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ... மேலும் பார்க்க