செய்திகள் :

ஹைவேயில் அன்புமணி ; ட்ராஃபிக்கில் ராமதாஸ்; U-Turn போடும் டிடிவி? | தேர்தல் பரபர

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க பரபரப்பாக தன் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது. 'அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி ஒரு வலிமையான கூட்டணியாக அமையும்' எனத் தொடர்ந்து கூறிவந்த அ.தி.மு.க தலைமை, அதற்கான எந்த முன்னெடுப்பிலும் பெரிதாக கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை அ.தி.மு.க-வுடன் அன்புமணி தரப்பு பா.ம.க, கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது. இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ``பா.ம.க எங்களுடன் கூட்டணியில் இணைந்திருக்கிறது. தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்துவிட்டோம். விரைவில் முழுத் தகவல்களையும் அறிவிப்போம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அன்புமணி - எடப்பாடி - கூட்டணிப் பேச்சுவார்த்தை
அன்புமணி - எடப்பாடி - கூட்டணிப் பேச்சுவார்த்தை

இதற்கிடையில், இன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி விரைந்திருக்கிறார. மாலை 7 மணிக்கு அமித் ஷாவைச் சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.

இன்று அமித் ஷாவைச் சந்திக்கும் எடப்பாடி கூட்டணி இறுதி வடிவம் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே அ.தி.மு.க தலைமையில் கூட்டணி உறுதி செய்யப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

இன்னும் சிலக் கட்சிகள் இணையும் என அ.தி.மு.க தலைமை நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறது. எனவே, எல்லாக் கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும். பா.ஜ.க-வும் கணிசமான தொகுதிகளைக் கேட்டிருக்கிறது. எனவே, 'வரும் 20-ம் தேதிக்குள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்க வேண்டும்' என அ.தி.மு.க தீர்மானித்திருக்கிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராமதாஸ், மோடி
ராமதாஸ், மோடி

இதன் அடிப்படையில், அன்புமணி தரப்பு பா.ம.க, கூட்டணிக்குள் வந்திருக்கும் நிலையில், ராமதாஸ் தரப்பு பா.ம.க-வையும் கூட்டணிக்குள் கொண்டுவர அ.தி.மு.க தரப்பு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

இது தவிர, 'கூட்டணி முடிவு குறித்து 9-ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்' எனத் தெரிவித்திருக்கும் தே.மு.தி.க-வையும் கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தவிர டிடிவி, ஒபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

அதே நேரம், அ.மு.மு.க பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய டிடிவி தினகரன், ``தேர்தல் நேரம் என்பதால் நண்பர், துரோகி, எதிரி என யாரையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எனவே, தேர்தல் சமயத்தில் அ.மு.மு.க விரைவில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும்" என்றார்.

எனவே, டிடிவி தினகரன் அ.தி.மு.க கூட்டணியில் இணைவாரா? அன்புமணி அ.தி.மு.க கூட்டணியைத் தேர்வு செய்திருக்கிறார் என்றால், ராமதாஸின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? என்பது உள்ளிட்ட சிலக் கேள்விகளை மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியனிடம் கேட்டோம்.

பத்திரிக்கையாளர் ப்ரியன்
பத்திரிக்கையாளர் ப்ரியன்

அதற்கு அவர்,``இன்று காலை எடப்பாடி, அன்புமணி பா.ம.க-வை தன்னுடன் கூட்டணியில் இணைத்துக்கொண்டார். அதனால், ராமதாஸுக்கு த.வெ.க, தி.மு.க என இரண்டு விருப்பத் தேர்வுகள் இருக்கின்றன. இதுதவிர, ராமதாஸ் பா.ம.க, தனித்து தேர்தலைச் சந்திக்கவோ அல்லது ச்ரிகாந்தியிடம் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கவோ செய்யலாம்.

த.வெ.க-வுக்கு ராமதாஸ் செல்வதாக இருந்தால் அவருடைய சீனியாரிட்டிக்கும், கௌரவத்துக்கும் புதிய கட்சிக் கூட்டணி சரிவருமா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் தேடிக்கொண்டுதான் முடிவெடுப்பார்.

ஒருவேளை ராமதாஸ் தி.மு.க கதவை தட்டலாம். அவர் தி.மு.க-வை தேர்வு செய்தால், தி.மு.க-வுக்குதான் நெருக்கடி ஏற்படும். ஏற்கெனவே, தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

எனவே, ராமதாஸுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் தி.மு.க-வுக்கு சிக்கல் இருக்கும். இன்னும் சிலக் கட்சிகள் தி.மு.க கூட்டணிக்கு வருவதற்கான சூழல் நிலவுகிறது. அது தவிர தி.மு.க கூட்டணியில் வி.சி.க இருக்கிறது. ராமதாஸ் வருகையை வி.சி.க எப்படி எதிர்கொள்ளும் என்றக் கேள்வியும் இருக்கிறது.

மேலும், கடந்த மூன்று தேர்தல்களிலும் பா.ம.க இல்லாமலே தேர்தலை எதிர்க்கொண்டது தி.மு.க. எனவே, பா.ம.க கூட்டணிக்குள் வருவது லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்ற நிலைதான் தி.மு.க-வுக்கு. இத்தகைய சூழலில் கூட்டணி அமைக்கும் விவகாரம் ராமதாஸுக்கு கொஞ்சம் சிரமமான காரியம்தான்.

பத்திரிக்கையாளர் ப்ரியன்
ராமதாஸ், அன்புமணி

இதுமட்டுமில்லாமல், பா.ம.க ஓட்டு பலம் ராமதாஸுக்கா... அன்புமணிக்கா... யாருக்கு அதிகம்? என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும். அதனால் தொகுதிப் பங்கீடு கேட்பதும், கொடுப்பதும் சற்று கடினமாகவே இருக்கும்.

சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டம் ஒன்றில் பேசிய ராமதாஸ், ``அன்புமணி ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிமை" எனப் பேசியிருந்தார். மேலும், தேர்தல் ஆணையம் பா.ம.க தலைவராக அன்புமணியைதான் அங்கீகரிக்கிறது. அதனால், பா.ம.க-வின் மாம்பழச் சின்னத்தை அன்புமணிக்கு கொடுக்கும் முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டது.

இன்னொருபுறம், டெல்லி உயர் நீதிமன்றம், ``உங்களுக்குள் பிரச்சனை இருந்தால் நீங்கள் சிவில் நீதிமன்றத்தில் தீர்வைத் தேடிக்கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துவிட்டது. அதனால் அன்புமணி அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இடம்பெறுவார் என்பது எதிர்பார்த்ததுதான். எனவே, அன்புமணி இருக்கும் கூட்டணிக்கு ராமதாஸால் செல்ல வாய்ப்பு மிக மிகக் குறைவு.

ராமதாஸ் பேசிய வார்த்தைகள், அவர் எடுத்த முடிவுகள் மூலம் அவர்தான் உண்மையான பா.ம.க என நம்புகிறார் என்பதை அறிய முடிகிறது. அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கி, ``அன்புமணிக்கும் பா.ம.க-வுக்கும் சம்பந்தமில்லை" என பகிரங்கமாக அறிவித்தார். ஒருகட்டத்தில் "அன்புமணி என் மகனே அல்ல" என்றெல்லாம் பேசியிருக்கிறார். எனவே, இவ்வளவு நடந்தப்பிறகும் ராமதாஸ் அன்புமணியுடன் கூட்டணிக்காக இணைவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

அப்பா - மகன் இணைப்புக்கு எத்தனையோ பேர் பலமுறை முயற்சி செய்து பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. எனவே, இப்போதுவரை ராமதாஸ் அன்புமணி இருக்கும் கூட்டணிக்குள் செல்லமாட்டார் என்பது என் கணிப்பு. மேலும், ராமதாஸை தோற்கடிக்கக் எதிரணியில் இணைந்து செயல்படவும் வாய்ப்பிருக்கிறது.

இது எல்லாவற்றையும் கடந்து ராமதாஸ் அதிமுக-வுடன் கூட்டணிக்குச் சென்றால், தேர்தல் அரசியல் என்பது 'கடைசி நேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்' என்ற விதியின் கீழ் இயங்குகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

டிடிவியை என்.டி.ஏ கூட்டணியில் சேர்ப்பதற்கு எடப்பாடி சம்மதம் தெரிவித்துவிட்டார் என்பது உண்மையல்ல. அ.மு.மு.க பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய டிடிவி தினகரன்,` `கடவுள், மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களின் பின்னால் அமுமுக செல்லாது" எனப் பேசினார். இது யாரைக் குறிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதே பொதுக்குழுவில், ``தேர்தல் நேரத்தில் எதிரிகள், துரோகிகள் என எதையும் பார்க்க முடியாது" என்றக் கருத்தும் கூறியிருக்கிறார். 'எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம்' எனப் பலமுறை தெரிவித்திருக்கிறார். அப்படியானால், எதிரிகள் துரோகிகள் எனக் குறிப்பிட்டு டிடிவி தினகரன் பேசியது திமுக-வைக் கூட குறிப்பிடலாம். இது அரசியல்... எப்போதும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்." என்றார்.

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க