செய்திகள் :

15 வயது சிறுவன்: விளையாடும்போதே சுருண்டு விழுந்து உயிரிழப்பு - அதிர்ச்சி

post image

கர்நாடக மாநிலம் தக்ஷிணா கன்னடா மாவட்டம் சுராத்கல் அருகே உள்ள சுரிஞ்சே கிராமத்தைச் சேர்ந்தவர் லிகித் அமீன். 15 வயதான இவர்10-ம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தனது நண்பர்களுடன் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்த லிகித் அமீன், ஆட்டத்தின் இடையே பந்தை சர்வ் செய்துவிட்டு வலைக்கு அருகில் ஓடிவந்து, திடீரென தனது கைகளை உயர்த்தி மைதானத்தை விட்டு வெளியேற முயன்றார். அப்போது நிலைகுலைந்து கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

விளையாடும்போதே மரணமடைந்த சிறுவன்
விளையாடும்போதே மரணமடைந்த சிறுவன்

இந்தத் திடுக்கிடும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. மாணவன் லிகித்தின் இந்தத் திடீர் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவரவில்லை என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரமும் தெரியும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 13 வயது சிறுவன் ஒருவன் கிரிக்கெட் விளையாடும் போது உயிரிழந்தார். சஹாரா கிராமத்தைச் சேர்ந்த விராட் சிங் சவுகான் என்ற 6-ம் வகுப்பு மாணவன், ஞாயிற்றுக்கிழமை காலையில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளான். பந்துவீசிக்கொண்டிருந்தபோது கையில் கடுமையான வலிப்பதாகக் கூறிய அச்சிறுவன், நொடிப்பொழுதில் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தான்.

விளையாடும்போதே மரணமடைந்த சிறுவன்
விளையாடும்போதே மரணமடைந்த சிறுவன்

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதியளித்தனர். அச்சிறுவன் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்த நிலையில், பிரேதப் பரிசோதனை செய்யக் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

சிறார்களின் இத்தகைய திடீர் உயிரிழப்புகள் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

`நான் உனது பாஸ்' எனக்கூறி பெண் பாலியல் வன்கொடுமை: தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை

தெஹல்கா பத்திரிகை நிறுவனரும் ஆசிரியருமான தருண் தேஜ்பால் 2013ம் ஆண்டு அந்த இதழ் ஏற்பாடு செய்திருந்த 'திங்க்ஃபெஸ்ட்' நிகழ்வின்போது, ​​கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் வைத்து, நவம்பர் 7 மற்றும் 8 ஆ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: காணாமல் போன 40 பவுன் நகை; காட்டிக் கொடுத்த அடகுக்கடை சி.சி.டி.வி - என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம், கீமங்கலம் காவல் சரகம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா, 2 குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வர... மேலும் பார்க்க

கரூர்: "ஒரு ருபாய் குறைந்தாலும் வேலை நடக்காது" - ரூ. 1000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ சிக்கியது எப்படி?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வெஞ்சமாங்கூடலுார் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (வயது: 36). இவர், ராஜபுரம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் ராஜபுரம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த... மேலும் பார்க்க

கரூர்: தலைமை ஆசிரியையைத் தாக்கிய ஆசிரியை; சஸ்பென்ட் செய்த அதிகாரி; வைரல் வீடியோவில் நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், சின்​னாண்​டாங்​கோ​வில் ஊராட்சி ஒன்​றி​யத் தொடக்​கப் பள்​ளி​யில் இடைநிலை ஆசிரியை​யாகப் பணிபுரிந்து வந்​தவர் கலைம​தி. இவர், சரிவர பணிக்கு வரு​வ​தில்லை என்​றும், மாணவர்​களை அடித்து துன்​ப... மேலும் பார்க்க

"மனைவி இல்லாமல் எப்படி வாழ்வேன்?" - மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் எடுத்த விபரீத முடிவு

திருச்சி மாவட்டம், துறையூர் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது: 71).இவரது மனைவி கண்ணம்மாள்.இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத சூழலில், திடீரென்று இறந... மேலும் பார்க்க

இன்ஸ்டா தோழியை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்த நபர்; உணவு ஆர்டர் செய்யும்போது சிக்கினார்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 18 வயது மாணவி 12வது வகுப்பு படித்து வருகிறார். நட்பு தினமான ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் ஒரு மாலுக்குச் செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு மாணவி தனது வீட்ட... மேலும் பார்க்க