செய்திகள் :

1989-ல் கடத்தல்: 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை கைது செய்த சிபிஐ! - கடத்தப்பட்டது யார் தெரியுமா?

post image

ஜம்மு காஷ்மீரில் 1989-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் முஃப்தி முகமது சயீத். அவரின் மகள் ருபையா சயீத். அவர் லால் சௌக்கில் உள்ள மருத்துவமனையில் இருந்து நவ்கானில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டார். அப்போது இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, “ருபையா சயீத் விடுவிக்கப்பட வேண்டுமானால், சிறையில் இருக்கும் 'ஜம்மு–காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF)' அமைப்பைச் சேர்ந்த 5 கைதிகளை விடுவிக்க வேண்டும்” என நிபந்தனை விதிக்கப்பட்டது.

ருபையா சயீத்
ருபையா சயீத்

இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, JKLF அமைப்பின் ஐந்து கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. மத்திய அரசின் இந்த முடிவை அப்போது ஜம்மு–காஷ்மீரின் முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா கடுமையாக எதிர்த்தார்.

இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் JKLF அமைப்பைச் சேர்ந்த யாசின் மாலிக் தலைமையிலான குழுவே எனக் கண்டறியப்பட்டது. தற்பொழுது யாசின் மாலிக், பயங்கரவாத நிதி பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

CBI
சி.பி.ஐ

மத்திய அரசால் விடுதலை செய்யப்பட்ட JKLF அமைப்பின் ஐந்து கைதிகளும், 1999-ம் ஆண்டு கந்தஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814-ஐ கடத்தலில் பங்கேற்றனர் என்பதும் ஒரு வேறு கதை.

இந்த நிலையில், மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI), ருபையா சயீத் கடத்தப்பட்ட வழக்கில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீநகரில் நேற்று ஷஃபாத் அகமது ஷுங்லூ என்பவரை கைது செய்துள்ளது. சாட்சியங்கள் மற்றும் ருபையாவின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ள இவர், தற்போது ஜம்முவில் உள்ள TADA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சென்னை: கவரிங் நகைக்காக மூதாட்டி கொலை - முதியவர் கைதான பின்னணி!

சென்னை பெரிய நொளம்பூர், சித்தார்த் நகர், வெள்ளாளர் தெருவில் தனியாக வசித்து வந்தவர் மேரி (79). 14.12.2025-ம் தேதி இரவு மூதாட்டி மேரி ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரின் மகன் எல்கீஸ் என்பவர் நொளம்... மேலும் பார்க்க

Bengaluru: பார்ட்டியில் குறுக்கிட்ட போலீஸ்; பைப் வழியாக தப்ப முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய பார்டியில் சச்சரவு ஏற்பட்டதால் ஞாயிறு அதிகாலை ஹோட்டலுக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். அதிர்ச்சியில் காவலர்களிடமிருந்து தப்பிக்க வடிகால் குழாய் வழியாக கீழே ... மேலும் பார்க்க

மர்ம மரணம்: மனைவியுடன் சடலமாக மீட்கப்பட்ட பிரபல ஹாலிவுட் இயக்குநர்; தீவிர விசாரணையில் காவல்துறை!

'தி பிரின்சஸ் பிரைட்', 'திஸ் இஸ் ஸ்பைனல் டேப்', 'வென் ஹாரி மெட் சாலி', 'மிசரி' மற்றும் 'எ ஃபியூ குட் மென்' போன்ற பல கிளாசிக் படங்களை இயக்கியவர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர். இவரும், இவர்... மேலும் பார்க்க

`பைனான்ஸ்' வழக்கறிஞரிடம் கடன் கேட்ட ஆசாமி; 17 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து ஓட்டம் - நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கையைச் சேர்ந்தவர் அகஸ்தீசன். வழக்கறிஞரான இவர், தனது சகோதரருடன் இணைந்து பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம், சிவா என்ற பெயரில் ஒருவர் அவருடன் அறிமுகமானார்... மேலும் பார்க்க

111 போலி நிறுவனங்கள், ரூ.1000 கோடி மோசடி; வெளிநாட்டில் இருந்து இயக்கிய சைபர் கும்பல் - CBI அதிர்ச்சி

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆன்லைன் போலி பங்குவர்த்தகம், வேலை வாய்ப்பு, எம்.எல்.எம் என பல்வேறு வழிகளில் இணையத்தள மோசடிகள் நடந்து வருகிறது. இதில் பொத... மேலும் பார்க்க

Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் பான்டி (Bondi) கடற்கரையில் இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க