செய்திகள் :

`2029-ல் அமித் ஷா காலியாகிவிடுவார்' - சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

post image

திண்டுக்கல் மாவட்டத்துக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 7-ம் தேதி வருகை தர உள்ளார். இதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் மேடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை பார்வையிடுவதற்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வருகை தந்தார்.

பின் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, " திண்டுக்கல்லுக்கு வருகை தரும் முதலமைச்சர் ரூ.1,500 கோடிக்கு அதிகமான மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி

எந்த மாநிலத்திலும் 50% ஓய்வூதியம் என்பது கொடுக்கப்படவில்லை. தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ள இந்த அறிவிப்பால் அனைத்து அரசு ஊழியர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். யாரும் குறை சொல்லவில்லை. நாங்கள் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்.

இடைநிலை ஆசிரியர்கள் போராடுவது அவர்களின் உரிமை. முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கைகளைக் கேட்டு நிதி நிலைமைக்கு ஏற்ப அதனை செய்வார். அனைவருக்கும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப்போல எந்த ஒரு அறிவிப்பு செய்தாலும் அதனை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் உள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி

ஆசிரியர்களை ஏமாற்ற மாட்டோம். அரசு ஊழியர்களை ஏமாற்ற மாட்டோம், அனைத்து அரசு ஊழியர்களும் திமுக பக்கம் உள்ளனர்.

2026ல் திரும்பவும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலினே வருவார். தமிழ்நாடு மக்கள் தெளிவாக கூறியுள்ளனர். அதிகமாக முன்னிலையில் இருப்பது திமுக தான்.

அமைச்சர் ஐ.பெரியசாமி

அமித் ஷா 2029 பற்றி கவலைப்பட வேண்டும். அப்போதும் தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது திமுக-தான் ஆட்சிக்கும் வரும். அமித் ஷா 2029இல் காலியாகி விடுவார்" என்றார்.

தமிழே உயிரே : `மார்பில் குண்டு பாயட்டும்!' | மொழிப்போரின் வீர வரலாறு - 2

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்தமிழே உயிரே! - பகுதி 2‘இந்தி எதிர்த்திட வாரீர் – நம் இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்’ என்று இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடு... மேலும் பார்க்க

ஹைவேயில் அன்புமணி ; ட்ராஃபிக்கில் ராமதாஸ்; U-Turn போடும் டிடிவி? | தேர்தல் பரபர

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க பரபரப்பாக தன் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது. 'அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி ஒரு வலிமையான கூட்டணியாக அமையும்' எனத் தொடர்... மேலும் பார்க்க

இந்தியா அல்ல; `வங்கதேச மாணவர் தலைவர் கொலைக்குக் காரணம், இவர்கள்தான்!' - போலீஸ் தகவல்

மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் கொலை வங்கதேசத்தை மீண்டும் கலவர பூமியாக்கியது. இந்தக் கொலைக்குப் பின்னால் இந்தியா இருக்கிறது என்று வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை துன்புறுத்தி வந்தனர் போராட்டக்காரர... மேலும் பார்க்க