செய்திகள் :

Bollywood: ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு; மர்ம நபர்களுக்கு வலை; என்ன நடந்தது?

post image

பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, சிங்கம், கோல்மால் உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார். மும்பையில் அவரது வீடு ஜுகுவில் இருக்கிறது.

இன்று அதிகாலையில் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் வெளியில் இருந்து நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோஹித் ஷெட்டி வீட்டிற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார் என்று தெரியவில்லை. இத்துப்பாக்கிச்சூடு நடந்தபோது ரோஹித் ஷெட்டி வீட்டில் இருந்தாரா என்பது குறித்து தெரியவில்லை. அதேசமயம் துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடந்ததை மும்பை போலீஸ் கமிஷனர் உறுதிபடுத்தியிருக்கிறார்.

மும்பை போலீஸாரும், குற்றப்பிரிவு போலீஸாரும் இணைந்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி
பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி

இத்தாக்குதலில் சர்வதேச கும்பலுக்குத் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு குறித்து ரோஹித் ஷெட்டி குடும்பத்தினர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ரோஹித் ஷெட்டி இதுவரை 17 படங்களை இயக்கி இருக்கிறார்.

இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது 2024 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சிறையில் இருக்கும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்குப் பொறுப்பு ஏற்றனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைக் கைது செய்தனர்.

இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு சல்மான் கான் வீட்டிற்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர். சல்மான் கானும் எப்போதும் குண்டு துளைக்காத கார்களையே பயன்படுத்தி வருகிறார்.

Aamir Khan: "நான் விவாகரத்து செய்ததற்கு அதுவும் ஒரு காரணம்" - ஆமீர் கான் ஓப்பன் டாக்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு முறை விவாகரத்து ஆனவர். தற்போது நேர்காணல் ஒன்றில் தனது வெற்றி தோல்விகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.சமீபத்தில் பத்திரிகை ஆசிரியர் ராஜ் ஷாமானியுடனான உரையாடலில்... மேலும் பார்க்க

"ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள், மார்க்கெட்டிங்" - பாலிவுட் சினிமா குறித்து பிரகாஷ் ராஜ் காட்டம்

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய கேரள இலக்கியத் திருவிழா நேற்று (ஜன.27) முடிவடைந்தது.இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பாலிவுட் சினிமாவை விமர்சித்துப் பேசியிருக்கி... மேலும் பார்க்க

Mouni Roy: "'சார் உங்களின் கையை எடுங்கள்' எனச் சொன்னதால் ஆபாச வார்த்தையில் திட்டினர்!" - மெளனி ராய்

பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்த மௌனி ராய், தமிழ் மக்களுக்கு 'நாகினி' தொடர் மூலம் பெரியளவில் பரிச்சயமானார். சமீபத்தில் அவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், அவருக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தை அவருடைய இன்ஸ்டா... மேலும் பார்க்க

Sikandar: "முதலில் கதை சுவாரஸ்யமானதாக இருந்தது; ஆனால், பிறகு நடந்தவை.!" - ராஷ்மிகா மந்தனா

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு 'மதராஸி', 'சிக்கந்தர்' என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மதராஸி' படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாலிவுட் படமான 'சிக்... மேலும் பார்க்க

``அதிகாரத்தில் இருப்பவர்கள் மௌனம் காப்பதும் கவலையளிக்கிறது" - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி ஆதரவு

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்துப் பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாகப் பேசிய... மேலும் பார்க்க

``ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல" - தஸ்லிமா நஸ்ரீன்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்து பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாக பேசியிர... மேலும் பார்க்க