செய்திகள் :

Canada Vs US: ``தாக்கப்படும் போதுதான் போர்; நாங்கள் தாக்கப்பட்டிருக்கிறோம்" - கனடப் பிரதமர் காட்டம்

post image

அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடாவின் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50% புதிய வரியை அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக அமெரிக்கா-கனடா இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இறுதியில் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பேச்சுவார்த்தை தோல்விக்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்த நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி செய்தியாளர்களிடம், ``அமெரிக்கா, கனடாவிற்கு விதித்த வரிகளுக்கு இணையாக டாலருக்கு டாலர் என்ற அடிப்படையில் புதிய வரிகள் விதிக்கப்படும். எஃகு, எலக்ட்ரானிக்ஸ், பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாயக் கருவிகள் மற்றும் காகிதப் பொருட்கள் உள்ளிட்டவை இந்த வரி விதிப்பில் அடங்கும்.

கனடிய தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு கனடாவும் இணையான வரிகளை விதிக்கும்.

அமெரிக்காவுடன் கனடா வர்த்தகப் போரில் ஈடுபடுகிறதா என்றால், தாக்கப்படும் போதுதான் போர் உருவாகிறது. நாங்கள் தாக்கப்பட்டிருக்கிறோம். கடைசி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த நியாயமற்ற மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளே பேச்சுவார்த்தை முறியக் காரணம்.

மேலும், பிற நாடுகளுடன் கனடா புதிய வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்வதைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

கனடாவின் இறையாண்மை மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் எந்த நிபந்தனைக்கும் பணியப்போவதில்லை. அமெரிக்க வரிகளால் பாதிக்கப்படும் கனடிய தொழில்துறை மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க அடுத்த வாரம் புதிய உதவித் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும், இந்த ஆதரவு பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடும்" எனத் தெரிவித்தார்.

மார்க் கார்னி
மார்க் கார்னி

கனடாவின் ஏற்றுமதியில் 70% அமெரிக்காவையே சார்ந்துள்ள நிலையில், வர்த்தக அமைப்புகளும் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லீவ்ரே உள்ளிட்ட தலைவர்களும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் க்ரீர், ``அமெரிக்காவுடன் இணைந்து செயல்படக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை கனடா நழுவவிட்டுவிட்டது. கனடாவின் இந்தப் பதிலடி நடவடிக்கைக்கு ஏற்ப நாங்கள் அடுத்தகட்ட முடிவுகளை எடுப்போம்" எனத் தெரிவித்திருக்கிறார்

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க